விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் |
சிறிய பட்ஜெட்டில் படங்களை தயாரித்து பெரிய வெற்றியை கொடுத்து புதிய டிரண்டை உருவாக்கிய நிறுவனம் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட். இதன் உரிமையாளராக தயாரிப்பாளர் சி.வி.குமார் இருக்கிறார். அட்டக்கத்தி, பீட்சா, சூது கவ்வும், தெகிடி, முண்டாசுபட்டி, சரபம், இன்று நேற்று நாளை என தொடர் வெற்றிகளை கொடுத்த நிறுவனம். தயாரிப்பாளர் சி.வி.குமார் இயக்குனராகி மாயவன், கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் படங்களை இயக்கினார்.
இந்த நிலையில் இந்த நிறுவனம் தமிழில் பிரபலமான 3 நாவல்களை படமாக்குகிறது. பிரபல எழுத்தாளர் தமிழ்மகன் எழுதிய ஆபரேஷன் நோவா, நான் ரம்யாவாக இருக்கிறேன், வேங்கை நங்கூரத்தின் ஜின் குறிப்புகள் ஆகிய நாவல்களை படமாக்கும் உரிமத்தை பெற்றுள்ளது திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம். இதனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.