செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
கூலி பட மேடையில்தான் ரஜினிகாாந்த் அடுத்து பேசப்போகிறார் என்று ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். கூலி பாடல் வெளியீட்டு விழா தள்ளிப்போகிறது. ஆனாலும் அடுத்த வாரம் ஒரு மேடையில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரஜினி பேசப் போகிறார். அது, மதுரை எம்பியும், எழுத்தாளருமான சு.வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவலின் ஒரு லட்சமாவது பிரதி விற்ற வெற்றி விழா. அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை சென்னையில் நடக்கும் இந்த விழாவில் ரஜினிகாந்த் மட்டுமல்ல, இயக்குனர் ஷங்கரும் பேசப்போகிறார்.
ஏற்கனவே, வேள்பாரி நாவலை படமாக்கும் வேலைகளில் இருக்கிறார் ஷங்கர். சூர்யா, சில இந்தி நடிகர்களிடம் பேசியநிலையில் எதுவும் நடக்கவில்லை. இப்போது இருவரும் நாவல் சம்பந்தப்பட்ட விழாவில் ஒன்றாக கலந்து கொள்வதால் ஷங்கர் இயக்கும் வேள்பாரி படத்தில் ரஜினியும் ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்கிறாரோ அல்லது அவரே ஹீரோவா என்ற கேள்வி பலருக்கு எழுந்துள்ளது. அடுத்தவாரம் விழா மேடையில் இதற்கான விடை கிடைக்கலாம்.