ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! | சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி! | விக்னேஷ் சிவனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் வாங்கிய அட்லி! | 'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..! | 'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு |

கூலி பட மேடையில்தான் ரஜினிகாாந்த் அடுத்து பேசப்போகிறார் என்று ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். கூலி பாடல் வெளியீட்டு விழா தள்ளிப்போகிறது. ஆனாலும் அடுத்த வாரம் ஒரு மேடையில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரஜினி பேசப் போகிறார். அது, மதுரை எம்பியும், எழுத்தாளருமான சு.வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவலின் ஒரு லட்சமாவது பிரதி விற்ற வெற்றி விழா. அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை சென்னையில் நடக்கும் இந்த விழாவில் ரஜினிகாந்த் மட்டுமல்ல, இயக்குனர் ஷங்கரும் பேசப்போகிறார்.
ஏற்கனவே, வேள்பாரி நாவலை படமாக்கும் வேலைகளில் இருக்கிறார் ஷங்கர். சூர்யா, சில இந்தி நடிகர்களிடம் பேசியநிலையில் எதுவும் நடக்கவில்லை. இப்போது இருவரும் நாவல் சம்பந்தப்பட்ட விழாவில் ஒன்றாக கலந்து கொள்வதால் ஷங்கர் இயக்கும் வேள்பாரி படத்தில் ரஜினியும் ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்கிறாரோ அல்லது அவரே ஹீரோவா என்ற கேள்வி பலருக்கு எழுந்துள்ளது. அடுத்தவாரம் விழா மேடையில் இதற்கான விடை கிடைக்கலாம்.




