சூர்யாவின் கருப்பு பட சிறப்பு காட்சிக்கு தமிழகஅரசு அனுமதி | 'பெத்தி' படம் தெலுங்கு மார்க்கெட்டை பிடித்து தரும்: ஜான்வி கபூர் நம்பிக்கை | மே 14ல் நெட்பிளிக்சில் வெளியாகும் 'துரந்தர்-2' | ஏ.ஆர்.முருகதாஸ் சொன்ன அட்வைஸ் : இன்றைக்கும் கடைபிடிக்கிறாராம் ஜெய் | விஜய் முதல்வராக பொறுப்பேற்றுள்ளாரே, எப்படி பார்க்கிறீர்கள்? மீடியாக்கள் கேள்விக்கு ரஜினியின் ரியாக்சன்! | ரஜினி, கமலுக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய் | 75 நாளில் 90 கோடி வசூலித்த ராதிகாவின் தாய் கிழவி! | அனில் ரவிபுடி படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் | பிளாஷ்பேக் : காணாமல் போன நல்லவள் | பிளாஷ்பேக் : கேரக்டருக்காக செத்துப்போன கருப்பு சுப்பையா |

தமிழ் இலக்கியத் துறையில் புகழ்பெற்ற எழுத்தாளர் லட்சுமி. இவரது பல நாவல்களை பலரும் திரைப்படமாக தயாரிக்க முன்வந்த போது அவர் மறுத்து வந்தார். எழுத்தில் கொண்டு வந்த உணர்வுகளை காட்சிகளில் கொண்டு வர முடியாது என்று கருதினார். என்றாலும் திரைப்படமாக வேண்டும் என்ற நோக்கில் அவர் எழுதிய நாவல் 'காஞ்சனாவின் கனவு'.
இந்த நாவல் புகழ்பெற்ற வார இதழ் ஒன்றில் தொடராக வெளிவந்தது. இந்த நாவலை எழுதும்போது அவர் லலிதா பத்மினியை மனதில் வைத்து கேரக்டர்களை உருவாக்கி வந்தார். இந்த கேரக்டரில் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என்று அவர் வாசகர்களிடையே கேட்கும்போது அவர்களும் லலிதா, பத்மினி என்று சொன்னார்கள்.
பின்பு இந்த நாவலை எஸ்.எம் ஸ்ரீராமுலு நாயுடு திரைப்படமாக இயக்கி தயாரித்தார். லட்சுமி கேட்டுக் கொண்டபடியே லலிதா, பத்மினியை நடிக்க வைத்தார். அவர்களுடன் கே.ஆர்.ராமசாமி, எம்.ஆர்.சந்தான லட்சுமி, ஆர்.எஸ்.மனோகர், எம்.என்.நம்பியார், டி.எஸ்.துரைராஜ், குமாரி தங்கம், பி.எஸ்.ஞானம், 'அப்பா' கே.துரை சுவாமி, என்.எஸ்.நாராயண பிள்ளை மற்றும் என்.கமலம் ஆகியோர் நடித்தார்கள். எஸ்எம் சுப்பையா நாயுடு இசையமைத்தார். இந்தப் படத்தில் கேஆர் ராமசாமி, லலிதா பத்மினி ஆகியோரின் நடிப்பு பேசப்பட்டாலும் படம் எதிர்பார்த்த வரவேற்பு பெறவில்லை.




