கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 | டில்லியில் ஹேமமாலினியின் பாதங்களைத் தொட்டு வணங்கிய பாலகிருஷ்ணா | ‛ப்ரோ 2' ஸ்கிரிப்ட் ரெடி : பவன் கல்யாணின் கிரீன் சிக்னலுக்கு காத்திருக்கும் சமுத்திரக்கனி | சாய்பல்லவி நடித்த முதல் ஹிந்தி பாடலுக்கு வரவேற்பு | துரந்தர் 2 : படம் பார்க்காமல் பாராட்டிய ஆமிர்கான் |

தமிழ் இலக்கியத் துறையில் புகழ்பெற்ற எழுத்தாளர் லட்சுமி. இவரது பல நாவல்களை பலரும் திரைப்படமாக தயாரிக்க முன்வந்த போது அவர் மறுத்து வந்தார். எழுத்தில் கொண்டு வந்த உணர்வுகளை காட்சிகளில் கொண்டு வர முடியாது என்று கருதினார். என்றாலும் திரைப்படமாக வேண்டும் என்ற நோக்கில் அவர் எழுதிய நாவல் 'காஞ்சனாவின் கனவு'.
இந்த நாவல் புகழ்பெற்ற வார இதழ் ஒன்றில் தொடராக வெளிவந்தது. இந்த நாவலை எழுதும்போது அவர் லலிதா பத்மினியை மனதில் வைத்து கேரக்டர்களை உருவாக்கி வந்தார். இந்த கேரக்டரில் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என்று அவர் வாசகர்களிடையே கேட்கும்போது அவர்களும் லலிதா, பத்மினி என்று சொன்னார்கள்.
பின்பு இந்த நாவலை எஸ்.எம் ஸ்ரீராமுலு நாயுடு திரைப்படமாக இயக்கி தயாரித்தார். லட்சுமி கேட்டுக் கொண்டபடியே லலிதா, பத்மினியை நடிக்க வைத்தார். அவர்களுடன் கே.ஆர்.ராமசாமி, எம்.ஆர்.சந்தான லட்சுமி, ஆர்.எஸ்.மனோகர், எம்.என்.நம்பியார், டி.எஸ்.துரைராஜ், குமாரி தங்கம், பி.எஸ்.ஞானம், 'அப்பா' கே.துரை சுவாமி, என்.எஸ்.நாராயண பிள்ளை மற்றும் என்.கமலம் ஆகியோர் நடித்தார்கள். எஸ்எம் சுப்பையா நாயுடு இசையமைத்தார். இந்தப் படத்தில் கேஆர் ராமசாமி, லலிதா பத்மினி ஆகியோரின் நடிப்பு பேசப்பட்டாலும் படம் எதிர்பார்த்த வரவேற்பு பெறவில்லை.