தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கும் ஜெயிலர் 2 படப்பிடிப்பு நடந்து வருகிறது. பார்ட் 2 என்பதால் முந்தைய பாகத்தில் நடித்தவர்கள் இதில் இருக்க வாய்ப்பு. ஆனால், முதல் பாகத்தில் ரஜினி மகனாக நடித்த வசந்த் ரவி இறந்துவிடுவதால் அவர் ஜெயிலர் 2 வில் இருக்கிறாரா? பிளாஷ்பேக் காட்சிகளில் வருகிறாரா என்பதில் சஸ்பென்ஸ் நீடிக்கிறது.
இது குறித்து அவரிடம் கேட்டால் ''ஜெயிலர் 2 உருவாகி வருவது மகிழ்ச்சி. என் சினிமா வாழ்க்கையில் ஜெயிலரில் அதுவும் ரஜினி சார் மகனாக நடித்தது பெரும் மகிழ்ச்சி. ஜெயிலர் 2வில் நான் இருக்கிறேனா? இல்லையா என்பது குறித்து தெரியாது. அது குறித்து படக்குழுதான் முடிவெடுக்க வேண்டும். நான் எதுவும் சொல்ல முடியாது. இப்போது இந்திரா என்ற படத்தில் கண் பார்வையற்ற போலீஸ் அதிகாரியாக வருகிறேன். ஆகஸ்ட் 22ல் படம் ரிலீஸ். ஜெயிலர் படத்தில் காமெடியனாக நடித்த சுனில் இதில் வில்லனாக வருகிறார். '' என்கிறார்.