ஜெயிலர் 2வில் வசந்த் இருக்கிறாரா? | அக்டோபர் முதல் பிக்பாஸ் சீசன் 9 : இந்தமுறை தொகுத்து வழங்குவது கமல்ஹாசனா? விஜய் சேதுபதியா? | ரூ.151 கோடியைக் கடந்த 'கூலி' முதல்நாள் வசூல் : லியோ சாதனை முறியடிப்பு | இளையராஜா, வைரமுத்து பிரிவுக்கு காரணம் இதுதான் : கங்கை அமரன் பரபரப்பு பேச்சு | நடிகை கஸ்தூரி பா.ஜ.,வில் இணைந்தார் | ‛அபூர்வ ராகங்கள்' தந்த ‛அபூர்வ' மனிதர் ரஜினி : 50 ஆண்டுகளை கடந்தும் நிற்கும் 'அதிசய' நாயகன் | 33 ஆண்டுகளை நிறைவு செய்த ஏஆர் ரஹ்மான் | விமர்சனங்களில் பின்னடைவைச் சந்திக்கும் 'வார் 2' | அமெரிக்காவில் 4 மில்லியன் வசூலை நெருங்கும் 'கூலி' | 50 ஆண்டுகள்... தமிழ் சினிமாவின் 'ராஜா' ரஜினிகாந்த் |
ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கும் ஜெயிலர் 2 படப்பிடிப்பு நடந்து வருகிறது. பார்ட் 2 என்பதால் முந்தைய பாகத்தில் நடித்தவர்கள் இதில் இருக்க வாய்ப்பு. ஆனால், முதல் பாகத்தில் ரஜினி மகனாக நடித்த வசந்த் ரவி இறந்துவிடுவதால் அவர் ஜெயிலர் 2 வில் இருக்கிறாரா? பிளாஷ்பேக் காட்சிகளில் வருகிறாரா என்பதில் சஸ்பென்ஸ் நீடிக்கிறது.
இது குறித்து அவரிடம் கேட்டால் ''ஜெயிலர் 2 உருவாகி வருவது மகிழ்ச்சி. என் சினிமா வாழ்க்கையில் ஜெயிலரில் அதுவும் ரஜினி சார் மகனாக நடித்தது பெரும் மகிழ்ச்சி. ஜெயிலர் 2வில் நான் இருக்கிறேனா? இல்லையா என்பது குறித்து தெரியாது. அது குறித்து படக்குழுதான் முடிவெடுக்க வேண்டும். நான் எதுவும் சொல்ல முடியாது. இப்போது இந்திரா என்ற படத்தில் கண் பார்வையற்ற போலீஸ் அதிகாரியாக வருகிறேன். ஆகஸ்ட் 22ல் படம் ரிலீஸ். ஜெயிலர் படத்தில் காமெடியனாக நடித்த சுனில் இதில் வில்லனாக வருகிறார். '' என்கிறார்.