‛ஜமா' இயக்குனரின் அடுத்த பட தலைப்பு ‛அன்பே டயானா' | எழுத்தாளரை மணந்தார் பாடகர் வேடன் | மீண்டும் நடிக்க வரும் ரம்பா | பிரியங்கா சோப்ராவின் தி பிளப் ஓடிடியில் வெளியானது | விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவுக்கு திருமண வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி | மார்ச் 6ல் ‛ஓ பட்டர்பிளை' ரிலீஸ் | ஜி.வி.பிரகாஷின் புதிய படங்கள் குறித்து தகவல் இதோ | பிளாஷ்பேக்: ஒரே படக்கதை; வெற்றியை சுவைத்த எம் கே ராதா... வீழ்ச்சியைக் கண்ட எம் ஜி ஆர் | ஆர்யா படத்தில் நடிக்கமாட்டேன்: அபர்ணதி சொன்னது ஏன்? | ஓடிடியிலும் வரவேற்பு பெற்ற ஆட்டோகிராப் : சேரன் மகிழ்ச்சி |

ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கும் ஜெயிலர் 2 படப்பிடிப்பு நடந்து வருகிறது. பார்ட் 2 என்பதால் முந்தைய பாகத்தில் நடித்தவர்கள் இதில் இருக்க வாய்ப்பு. ஆனால், முதல் பாகத்தில் ரஜினி மகனாக நடித்த வசந்த் ரவி இறந்துவிடுவதால் அவர் ஜெயிலர் 2 வில் இருக்கிறாரா? பிளாஷ்பேக் காட்சிகளில் வருகிறாரா என்பதில் சஸ்பென்ஸ் நீடிக்கிறது.
இது குறித்து அவரிடம் கேட்டால் ''ஜெயிலர் 2 உருவாகி வருவது மகிழ்ச்சி. என் சினிமா வாழ்க்கையில் ஜெயிலரில் அதுவும் ரஜினி சார் மகனாக நடித்தது பெரும் மகிழ்ச்சி. ஜெயிலர் 2வில் நான் இருக்கிறேனா? இல்லையா என்பது குறித்து தெரியாது. அது குறித்து படக்குழுதான் முடிவெடுக்க வேண்டும். நான் எதுவும் சொல்ல முடியாது. இப்போது இந்திரா என்ற படத்தில் கண் பார்வையற்ற போலீஸ் அதிகாரியாக வருகிறேன். ஆகஸ்ட் 22ல் படம் ரிலீஸ். ஜெயிலர் படத்தில் காமெடியனாக நடித்த சுனில் இதில் வில்லனாக வருகிறார். '' என்கிறார்.