துரந்தர் 2 : படம் பார்க்காமல் பாராட்டிய ஆமிர்கான் | சான்வே மேக்னாவின் புதிய படம் | பிளாஷ்பேக்: இளையராஜாவின் ஆல்பம் இசையை பின்னணி இசையாக பயன்படுத்திய பாலுமகேந்திரா | பிளாஷ்பேக் : கடைசி வரை கஷ்டத்தில் வாழ்ந்த புஷ்பவல்லி | நிறைய சுமைகளை சுமக்காதீர்கள் : சமுத்திரகனி அட்வைஸ் | ‛நூறு சாமி' படக் கதை குறித்து பகிர்ந்த சசி | முத்து என்கிற காட்டானுக்கு பின்னால் நடந்ததையும் வெப் தொடராக எடுக்கலாம் : விஜய் சேதுபதி | ஓடிடியில் வரவேற்பைப் பெற்ற 'மேட் இன் கொரியா' | துரந்தர் : இரண்டு பாகங்களிலும் 1000 கோடி வசூலித்த முதல் இந்தியத் திரைப்படம் | பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா |

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர். அதன்பின் இருவரும் தனித்தனி பாதையில் பயணிக்க தொடங்கி இன்று உச்ச நட்சத்திரங்களாக உள்ளனர். பல ஆண்டுகளுக்கு பின் இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க முடிவாகி சில மாதங்களுக்கு முன் அதுபற்றிய அறிவிப்பு வந்தது. இருப்பினும் இருவருக்கான கதை பொருத்தக்கூடிய இயக்குனரை தேர்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.
இப்போது அதற்கான விடையாக இவர்களின் படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்க போகிறார். இவர் தற்போது ரஜினியின் ஜெயிலர் 2 படத்தையும் இயக்கி வருகிறார். ரஜினி, கமல் படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இதுதொடர்பாக நேற்று முதல் சிறு சிறு அப்டேட்களை இந்நிறுவனம் அறிவித்து வருகிறது.
இந்நிலையில் நாளை நண்பகல் 12 : 07 மணியளவில் படம் பற்றிய அறிவிப்பை வீடியோ மூலம் வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். சமீபத்தில் இந்த அறிவிப்பு வீடியோவுக்கான படப்பிடிப்பு நடந்துள்ளது. ரெட்ரோ டைப் ஸ்டைலில் இப்படம் இருக்கும் என தெரிகிறது. அதுதொடர்பான குறியீடுகள் போஸ்டரில் வெளிப்படுகின்றன.