ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
தமிழில் “துருவங்கள் 16“, “இருட்டு அறையில் முரட்டு குத்து“, “நோட்டா“, “ஜாம்பி“ போன்ற படங்களில் நடித்தவர் யாஷிகா ஆனந்த். பிக் பாஸ் சீசன் 2 மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். அடுத்ததாக சல்பர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இது தவிர “ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது“, “இவன் தான் உத்தமன்“, “ராஜபீமா“ என பிஸியாக நடித்து வருகிறார்.
சமூகவலைதளத்தில் எப்போதும் ஆக்டிவ்வாக இருப்பவர்களில் யாஷிகாவும் ஒருவர். அடிக்கடி தனது கவர்ச்சியான படங்களை பதிவிடுவது அவரது ஸ்டைல். இதனாலேயே அவருக்கு நிறைய பாலோயர்கள் உள்ளனர்.
இந்நிலையில் துபாய் விலங்கு நல பூங்கா ஒன்றில் தான் எடுத்த வீடியோவை பதிவிட்டுள்ளார் யாஷிகா. அதில், அங்கிருக்கும் விலங்குகளோடு கொஞ்சி விளையாடும் யாஷியா, ஒட்டகம் ஒன்றிற்கு சிறு துண்டு இலையை தனது வாயில் வைத்துக் கொடுக்கிறார். ஒட்டகமும் அவரிடம் இருந்து அதைப் பிடுங்கி சாப்பிடுகிறது.
பார்ப்பதற்கு இந்தக் காட்சி காதலர்களின் ரொமான்ஸ் மாதிரி இருப்பதாக நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர். கூடவே ஒட்டகத்திற்கு இலையைக் கையில் தரக் கூடாதா என திட்டவும் செய்துள்ளனர்.