நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் |
இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் யாஷிகா ஆனந்த். ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். தொடர்ந்து சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் இவர் கவர்ச்சியான போட்டோ, வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வந்தார்.
கடந்த 2021ல் தனது நண்பர்களுடன் மாமல்லபுரம் அருகே காரில் சென்றபோது விபத்தில் சிக்கினார். இதில் அவரது தோழி வள்ளிசெட்டி பவனி உயிரிழந்தார். யாஷிகா படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் 6 மாதங்களுக்கு பின் குணமாகி வந்தார். மீண்டும் தற்போது படங்களில் நடித்து வருகிறார்.
யாஷிகாவின் கார் விபத்து குறித்த வழக்கு செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கடந்த 21ம் தேதி யாஷிகா நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டிருந்த நிலையில் அவர் ஆஜராகவில்லை. இந்நிலையில் யாஷிகாவிற்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். வருகிற ஏப்., 25க்குள் யாஷிகா ஒருவேளை ஆஜராகவில்லை என்றால் அவர் கைதாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.