கார்த்தி படத்தில் இணைந்த கல்யாணி | கடந்த 40 ஆண்டுகளாக பணத்தை மதிக்காமல் இருந்தேன் : நடிகர் சசிகுமார் | ''விஜய்சேதுபதி மகன் விஜய் மாதிரி வருவார்'': வனிதா விஜயகுமார் | ஒரே நாளில் மீட்கப்பட்ட உன்னி முகுந்தனின் இன்ஸ்டாகிராம் கணக்கு | 50 லட்சம் உதவி செய்வதாக பிரபாஸ் சொல்லவில்லை : காமெடி நடிகரின் குடும்பம் மறுப்பு | 77 லட்சம் மோசடி செய்ததாக நடிகை ஆலியா பட்டின் முன்னாள் பெண் உதவியாளர் கைது | 24 ஆண்டுகளுக்கு பிறகு டிஜிட்டலீில் ரீ ரீலீஸாகும் மோகன்லாலின் ராவண பிரபு | காமெடி நடிகர் கிங்காங் மகளின் திருமணம் நடைபெற்றது! | தனியார் பேருந்துகள் ஓடாத கேரளா வெளிநாடு போல இருக்கிறது : 2018 இயக்குனர் சர்ச்சை கருத்து | 7 வருடங்களாக புறக்கணிக்கப்பட்ட பட வாய்ப்பு : விஷ்ணு விஷால் ஓபன் டாக் |
வினய் பரத்வாஜ் இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி, புன்னகை பூ கீதா, யாஷிகா ஆனந்த் நடித்துள்ள படம் 'சில நொடிகளில்'. மிஸ்ட்ரி, சஸ்பென்ஸ் ஜார்னரில் தயாராகி உள்ள இந்த படம் வருகிற 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. முழு படமும் லண்டனில் தயாராகி உள்ளது. படத்தில் ரிஷியும், புன்னகை பூ கீதாவும் அன்பான கணவன் மனைவி. இவர்களின் வாழ்க்கைக்கு இடையில் வருகிறார் மாடல் அழகி யாஷிகா ஆனந்த். ரிஷியின் முன்னாள் காதலி. அவருக்கு ஒரு பெரிய பிரச்சினை. இப்படியான கதையில் என்ன தீர்வு என்பதுதான் படம்.
படத்தில் நடித்திருப்பது பற்றி யாஷிகா ஆனந்த் கூறும்போது “நிஜத்தில் நான் ஒரு மாடல் அழகி. படத்திலும் மாடல் அழகியாக நடித்திருக்கிறேன். அதனால் நடிக்க மிகவும் எளிதாக இருந்தது. 'துருவங்கள் பதினாரு' என்ற திரில்லர் படத்தில் இருந்துதான் எனது சினிமா தொடங்கியது. நானும் திரில்லர் படத்தின் மிகப்பெரிய ரசிகை அதனால் இந்த படத்தில் விரும்பி நடித்தேன். ரிச்சர்டுடன் நடித்ததன் மூலம் அவர் எனக்கு நல்ல நண்பர் ஆனார். இதன் மூலம் நான் அஜித் சாருக்கும் நெருக்கமாகி இருக்கிறேன். அஜித் சாரின் மிகப்பெரிய ரசிகை நான். என்றார்.