100 நாளுக்கு பின்தான் இனி ஓ.டி.டி.யில் சினிமா; தியேட்டர்கள் அதிபர்கள் சங்கம் அதிரடி | ரேஸில் கார் பழுது : அஜித்தின் பாசிட்டிவ் ரிப்ளே...! | 48 மணிநேரம் தூக்கமில்லை : ஷாலினி பாண்டே | 16 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடை செய்ய வேண்டும் : சோனு சூட் | ஆளுமை உரிமை கேட்டு பவன் கல்யாண் வழக்கு | விவாகரத்து வதந்தி : கடும் கோபத்தை வெளிப்படுத்திய அபிஷேக் பச்சன் | சூர்யாவின் கருப்பு ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போகிறதா? | ரெட்ட தல படத்தின் டார்க் தீம் பாடல் வெளியானது | சோசியல் மீடியாவில் போட்ட பதிவால் ட்ரோலில் சிக்கிய தமன் | இந்த வார ரிலீஸ் : தியேட்டர்களைக் காப்பாற்றும் 'படையப்பா' |

புச்சி பாபு சனா இயக்கத்தில் தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில் வைஷ்வ் தேஜ், கிரித்தி ஷெட்டி, விஜய் சேதுபதி மற்றும் பலர் நடித்து கடந்த மாதம் வெளிவந்த தெலுங்குப் படம் 'உப்பெனா'.
இப்படம் உலக அளவில் ரூ.100 கோடி வசூலைக் கடந்துவிட்டதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. தெலுங்குத் திரையுலகத்தில் ஒரு புதுமுகம் நடித்து வெளிவந்த படம் கொரானோ காலகட்டத்திலும் ரூ.100 கோடி வசூலித்தது சாதாரண விஷயமல்ல என்ற மகிழ்ச்சியில் இருக்கிறது தெலுங்குத் திரையுலகம்.
இப்படத்தைப் பார்த்த மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் உள்ளிட்ட பல தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள் படத்தையும், படக்குழுவினரையும் பாராட்டினர்.
தியேட்டர் வசூலில் மட்டும் ரூ.100 கோடியைக் கடந்த இப்படத்தின் ஓடிடி உரிமை கூட பல கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. படத்தில் அறிமுகமான வைஷ்ணவ் தேஜ், கிரித்தி ஷெட்டி ஆகியோருக்கு பல புதிய பட வாய்ப்புகள் தேடி வந்துள்ளன. படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த தமிழ் நடிகரான விஜய் சேதுபதியும் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளார். அவரைத் தேடியும் பல தெலுங்குப் பட வாய்ப்புகள் வருகிறதாம்.
தெலுங்குத் திரையுலகில் கொரானாவிற்குப் பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்ட பின் வெளியான ஒரு படம் ரூ.100 கோடி வசூலைப் பெறுவது இதுவே முதல் முறை.




