22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
குணசேகர் இயக்கத்தில் சமந்தா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் 'சகுந்தலம்'. இப்படத்தில் சமந்தாவின் ஜோடியாக துஷ்யந்தன் ஆக மலையாள நடிகர் தேவ் மோகன் நடிக்கிறார். காளிதாஸ் எழுதிய சகுந்தலம் தான் திரைப்படமாகிறது. மன்னர் துஷ்யந்தன் மற்றும் சகுந்தலை இடையேயான காதல் கதைதான் 'சகுந்தலம்'. விசுவாமித்திரர் மற்றும் மேனகைக்கு மகளாகப் பிறந்தவர்தான் சகுந்தலம்.
இப்படத்தில் நடிப்பதற்காக தேவ் மோகன் கடந்த மூன்று மாதங்களாக குதிரையேற்ற பயிற்சி, வாள்வீச்சுப் பயிற்சி உள்ளிட்டவைகளை மேற்கொண்டாராம். தெலுங்கு மொழியைக் கற்றுக் கொள்ளவும் பயிற்சி எடுத்துள்ளாராம்.
“துஷ்யந்தன் அவருடைய அழகான தோற்றத்தால் அறியப்படுபவர். அவர் எங்கு சென்றாலும் அவருடைய அழகில் பெண்கள் மயங்குவார்கள். நம்மில் யாருக்கும் துஷ்யந்தன் எப்படி இருப்பார் என்று தெரியாது. இதற்கு முன்பு மக்களுக்குத் தெரிந்த நடிகராகவோ, ஒரு குறிப்பிட்ட இமேஜ் உடையவராகவோ இருக்கும் ஒருவரைத் தேர்வு செய்யக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். கடைசியாகத்தான் தேவ் மோகனைத் தேர்வு செய்தோம்,” என்கிறார் இயக்குனர் குணசேகர்.
மலையாளத்தில் சில படங்களில் நடித்துள்ள தேவ் மோகன் 'சகுந்தலம்' மூலம் தெலுங்குத் திரையுலகில் அறிமுகமாகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் 20ம் தேதி முதல் நடைபெற உள்ளது.