மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை | அஜித்தை சந்தித்த நடிகர் சதீஷ் | முகத்தை காட்டாமல் நடித்து இருக்கும் புதுமுக நாயகன், நாயகி | நிறைய பாலியல் தொல்லை : பாடகி ஜொனிடா காந்தி |
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இடம் பிடித்துள்ள விஜய் சேதுபதி, அடுத்து தன்னுடைய நடிப்பு எல்லையை விரிவாக்கி வருகிறார். தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.
இதற்கு முன்பு தெலுங்கில் சிரஞ்சீவி நடித்த 'சைரா' என்ற படத்தில் சிறிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்தார். அடுத்து தெலுங்கில் நேற்றுமுன்தினம் வெளியான 'உப்பெனா' படத்தில் வில்லனாக நடித்துள்ளார். அறிமுக நடிகர்களான வைஷ்ணவ் தேஜ், கிரித்தி ஷெட்டி நாயகன் நாயகியாக நடித்துள்ள இந்தப் படத்திற்கு முன்னணி நடிகர்களுக்கு உண்டான வரவேற்பு கிடைத்துள்ளதாம்.
முதல் நாளில் மட்டும் சுமார் 10 கோடி ரூபாய் வசூலித்துவிட்டதாக டோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள். நேற்று, இன்றும் விடுமுறை தினம் என்பதால் அடுத்த இரண்டு நாட்களிலேயே இந்தப் படம் லாபத்தை நோக்கிச் சென்று விடும் என்கிறார்கள்.
சிரஞ்சீவி குடும்பத்திலிருந்து வந்துள்ள மற்றொரு வாரிசான வைஷ்ணவ் தேஜ் முதல் படத்திலேயே முத்திரை பதித்துவிட்டதாக விமர்சகர்கள் பாராட்டுகிறார்கள். விஜய் சேதுபதியின் நடிப்பும் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. இதன் மூலம் விஜய் சேதுபதிக்கு தெலுங்கில் தொடர்ந்து வாய்ப்புகள் குவியும் என்று தெரிவிக்கிறார்கள்.