பிரீத்தி அஸ்ராணிக்காக கதையை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக் : கன்னட எழுத்தாளர் கதையை படமாக்கிய கே. பாக்யராஜ் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே கிராமத்தில் எடுக்கப்பட்ட படம் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் பார்வதி நாயர் படம் | மீரா மிதுன் மீதான வன்கொடுமை வழக்கை தள்ளுபடி செய்ய கோர்ட் மறுப்பு | திருப்பதியில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த ரஜினிகாந்த் | வா வாத்தியார் : கை கொடுக்காமல் போன கார்த்தி | சாந்தனு, அஞ்சலி நாயர் நடிப்பில் ‛மெஜந்தா' | பாகிஸ்தானுக்கு எதிரான கதையா? ரன்வீர் சிங்கின் துரந்தர் படத்திற்கு தடை | முதல் படம் திரைக்கு வரும் முன்பே 3 ஹிந்தி படங்களில் நடிக்கும் ஸ்ரீ லீலா! |

தென்னிந்தியத் திரையுலகின் பிரம்மாண்டப் படங்களைக் கொடுத்து ரசிகர்களைக் கவர்ந்தவர் தமிழ் இயக்குனரான ஷங்கர். பாகுபலி படங்களுக்குப் பிறகு அவருக்குப் போட்டியாக தெலுங்கு இயக்குனர் ராஜமவுலியும் வந்துவிட்டார். தன்னுடைய அடுத்த படமான ஆர்ஆர்ஆர் படத்தையும் பிரம்மாண்டமாக உருவாக்கி வருகிறார் ராஜமவுலி.
தமிழ் நடிகர்கள் யாரும் இன்னும் பான்-இந்தியா அளவிற்கு வளராத காரணத்தால் இயக்குனர் ஷங்கரும் தெலுங்கு ஹீரோவான ராம் சரணுடன் இணைய முடிவு செய்துவிட்டார் போலிருக்கிறது.
ஷங்கர், ராம் சரண் இணையும் புதிய படத்தின் அறிவிப்பு நேற்றுமுன்தினம் வெளியானது. தன் மகன் ராம் சரண் அடுத்து இயக்குனர் ஷங்கருடன் இணைந்திருப்பது அப்பா சிரஞ்சீவிக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
“கலைகளின் மாஸ்டர், எல்லைகளைக் கடந்து, தொலைநோக்குடன் செயல்படுவதில் முன்னோடி இயக்குனர் ஷங்கருடன் ராம் சரண் இணைவது சிலிர்ப்பாக உள்ளது. இந்திய சினிமாவில் தனி முத்திரை பதிக்கும் இயக்குனர்களுடன் அடுத்தடுத்த படங்களில் பணிபுரிவது மகிழ்ச்சி அளிக்கிறது,” என மகன் ராம் சரணை வாழ்த்தியுள்ளார் சிரஞ்சீவி.
தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் உருவாக்கப்படும் இப்படம், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாக உள்ளது.