‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
தென்னிந்தியத் திரையுலகின் பிரம்மாண்டப் படங்களைக் கொடுத்து ரசிகர்களைக் கவர்ந்தவர் தமிழ் இயக்குனரான ஷங்கர். பாகுபலி படங்களுக்குப் பிறகு அவருக்குப் போட்டியாக தெலுங்கு இயக்குனர் ராஜமவுலியும் வந்துவிட்டார். தன்னுடைய அடுத்த படமான ஆர்ஆர்ஆர் படத்தையும் பிரம்மாண்டமாக உருவாக்கி வருகிறார் ராஜமவுலி.
தமிழ் நடிகர்கள் யாரும் இன்னும் பான்-இந்தியா அளவிற்கு வளராத காரணத்தால் இயக்குனர் ஷங்கரும் தெலுங்கு ஹீரோவான ராம் சரணுடன் இணைய முடிவு செய்துவிட்டார் போலிருக்கிறது.
ஷங்கர், ராம் சரண் இணையும் புதிய படத்தின் அறிவிப்பு நேற்றுமுன்தினம் வெளியானது. தன் மகன் ராம் சரண் அடுத்து இயக்குனர் ஷங்கருடன் இணைந்திருப்பது அப்பா சிரஞ்சீவிக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
“கலைகளின் மாஸ்டர், எல்லைகளைக் கடந்து, தொலைநோக்குடன் செயல்படுவதில் முன்னோடி இயக்குனர் ஷங்கருடன் ராம் சரண் இணைவது சிலிர்ப்பாக உள்ளது. இந்திய சினிமாவில் தனி முத்திரை பதிக்கும் இயக்குனர்களுடன் அடுத்தடுத்த படங்களில் பணிபுரிவது மகிழ்ச்சி அளிக்கிறது,” என மகன் ராம் சரணை வாழ்த்தியுள்ளார் சிரஞ்சீவி.
தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் உருவாக்கப்படும் இப்படம், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாக உள்ளது.