நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
'பாகுபலி' படத்திற்குப் பிறகு தென்னிந்தியத் திரைப்படங்கள் தங்களது எல்லைகளைக் கடந்து வட இந்தியாவுக்குள்ளும் நுழைந்தது. அதன்பிறகு தற்போது எடுக்கப்பட்டு வரும் சில முன்னணி நடிகர்களின் படங்கள் தென்னிந்திய வெளியீடாக மட்டுமல்லாமல் வட இந்திய வெளியீடாகவும் அமைந்து 'பான் இந்தியா' படங்களாக மாறியுள்ளது.
அந்த விதத்தில் வரிசையாக சில பான் இந்தியா படங்கள் வெளிவர உள்ளன. அவற்றில் பெரும்பாலான படங்கள் தெலுங்குப் படங்களாக மட்டுமே இருக்கின்றன. ஒரு காலத்தில் தென்னிந்தியத் திரையுலகத்தில் தமிழ்த் திரைப்படங்கள் தான் சாதனை புரிந்த படங்களாக இருந்தன. அந்த இடத்தை தற்போது தெலுங்குப் படங்கள் கைப்பற்றிவிட்டது.
ஜுலை 2ல் 'மேஜர்', ஜுலை 16ல் 'கேஜிஎப் 2', ஜுலை 30ல் 'ராதே ஷ்யாம்', ஆகஸ்ட் 13ல் 'புஷ்பா', செப்டம்பர் 9ல் 'லைகர்', அக்டோபர் 13ல் 'ஆர்ஆர்ஆர்' என இந்தப் படங்கள் அனைத்துமே பான் இந்தியா படங்களாகத்தான் வெளியாக உள்ளன. அவற்றில் ஒரு படம் கூட தமிழ்ப் படம் இல்லை என்பது தமிழ்த் திரையுலகத்திற்கு வருத்தமான ஒரு விஷயம்.
விஜய் நடித்த 'மாஸ்டர்' படம் பான் இந்தியா படமாகத்தான் வெளிவந்தது. ஆனால், ஹிந்தியில் டப்பிங் ஆகி வெளியான இப்படம் வட இந்தியாவில் படுதோல்வியைச் சந்தித்தது. தெலுங்குத் திரையுலகத்துடன் போட்டி போடும் அளவில் தமிழ் சினிமா இனி வரும் காலங்களில் போட்டி போட்டால் தான் அடுத்த கட்டத்திற்கு நகர முடியும் என்பது மறுக்க முடியாத உண்மை.