மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
'பாகுபலி' படத்திற்குப் பிறகு தென்னிந்தியத் திரைப்படங்கள் தங்களது எல்லைகளைக் கடந்து வட இந்தியாவுக்குள்ளும் நுழைந்தது. அதன்பிறகு தற்போது எடுக்கப்பட்டு வரும் சில முன்னணி நடிகர்களின் படங்கள் தென்னிந்திய வெளியீடாக மட்டுமல்லாமல் வட இந்திய வெளியீடாகவும் அமைந்து 'பான் இந்தியா' படங்களாக மாறியுள்ளது.
அந்த விதத்தில் வரிசையாக சில பான் இந்தியா படங்கள் வெளிவர உள்ளன. அவற்றில் பெரும்பாலான படங்கள் தெலுங்குப் படங்களாக மட்டுமே இருக்கின்றன. ஒரு காலத்தில் தென்னிந்தியத் திரையுலகத்தில் தமிழ்த் திரைப்படங்கள் தான் சாதனை புரிந்த படங்களாக இருந்தன. அந்த இடத்தை தற்போது தெலுங்குப் படங்கள் கைப்பற்றிவிட்டது.
ஜுலை 2ல் 'மேஜர்', ஜுலை 16ல் 'கேஜிஎப் 2', ஜுலை 30ல் 'ராதே ஷ்யாம்', ஆகஸ்ட் 13ல் 'புஷ்பா', செப்டம்பர் 9ல் 'லைகர்', அக்டோபர் 13ல் 'ஆர்ஆர்ஆர்' என இந்தப் படங்கள் அனைத்துமே பான் இந்தியா படங்களாகத்தான் வெளியாக உள்ளன. அவற்றில் ஒரு படம் கூட தமிழ்ப் படம் இல்லை என்பது தமிழ்த் திரையுலகத்திற்கு வருத்தமான ஒரு விஷயம்.
விஜய் நடித்த 'மாஸ்டர்' படம் பான் இந்தியா படமாகத்தான் வெளிவந்தது. ஆனால், ஹிந்தியில் டப்பிங் ஆகி வெளியான இப்படம் வட இந்தியாவில் படுதோல்வியைச் சந்தித்தது. தெலுங்குத் திரையுலகத்துடன் போட்டி போடும் அளவில் தமிழ் சினிமா இனி வரும் காலங்களில் போட்டி போட்டால் தான் அடுத்த கட்டத்திற்கு நகர முடியும் என்பது மறுக்க முடியாத உண்மை.