நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பவன் கல்யாண், அயோத்தியில் ராமர் கோயில் கட்ட 30 லட்ச ரூபாயை நன்கொடையாக சமீபத்தில் வழங்கி இருந்தார். அவரது நன்கொடையால் உந்தப்பட்ட பவன் கல்யாணை வைத்து படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர்கள், தற்போது தயாரித்துக் கொண்டிருக்கும் சிலர் ஒன்றாக 54 லட்சத்து 51 ஆயிரம் ரூபாயை ராமர் கோயில் கட்ட நன்கொடையாக வழங்கியுள்ளார்கள்.
தயாரிப்பாளர்கள் ஏஎம் ரத்னம், ராதாகிருஷ்ணா, தில் ராஜு, நவீன் எல்நேனி, பண்டலா கணேஷ் ஆகியோர் அந்தப் பணத்தை பவன் கல்யாண் முன்னிலையில் வழங்கினார்கள். இத்தகவலை பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியினர் வெளியிட்டுள்ளார்கள்.
ஆந்திர மாநிலத்தில் இந்து மக்களுக்காக அதிகம் குரல் கொடுக்கக் கூடிய நடிகர்களில் ஒருவராக பவன் கல்யாண் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அவர் நன்கொடை அளித்ததைத் தொடர்ந்து பலரும் அது போல நன்கொடை வழங்கி வருகிறார்கள்.