'ஹேப்பி ராஜ்' இரண்டு குடும்பங்களின் கதை | பிரீத்தி அஸ்ராணிக்காக கதையை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக் : கன்னட எழுத்தாளர் கதையை படமாக்கிய கே. பாக்யராஜ் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே கிராமத்தில் எடுக்கப்பட்ட படம் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் பார்வதி நாயர் படம் | மீரா மிதுன் மீதான வன்கொடுமை வழக்கை தள்ளுபடி செய்ய கோர்ட் மறுப்பு | திருப்பதியில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த ரஜினிகாந்த் | வா வாத்தியார் : கை கொடுக்காமல் போன கார்த்தி | சாந்தனு, அஞ்சலி நாயர் நடிப்பில் ‛மெஜந்தா' | பாகிஸ்தானுக்கு எதிரான கதையா? ரன்வீர் சிங்கின் துரந்தர் படத்திற்கு தடை |

தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பவன் கல்யாண், அயோத்தியில் ராமர் கோயில் கட்ட 30 லட்ச ரூபாயை நன்கொடையாக சமீபத்தில் வழங்கி இருந்தார். அவரது நன்கொடையால் உந்தப்பட்ட பவன் கல்யாணை வைத்து படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர்கள், தற்போது தயாரித்துக் கொண்டிருக்கும் சிலர் ஒன்றாக 54 லட்சத்து 51 ஆயிரம் ரூபாயை ராமர் கோயில் கட்ட நன்கொடையாக வழங்கியுள்ளார்கள்.
தயாரிப்பாளர்கள் ஏஎம் ரத்னம், ராதாகிருஷ்ணா, தில் ராஜு, நவீன் எல்நேனி, பண்டலா கணேஷ் ஆகியோர் அந்தப் பணத்தை பவன் கல்யாண் முன்னிலையில் வழங்கினார்கள். இத்தகவலை பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியினர் வெளியிட்டுள்ளார்கள்.
ஆந்திர மாநிலத்தில் இந்து மக்களுக்காக அதிகம் குரல் கொடுக்கக் கூடிய நடிகர்களில் ஒருவராக பவன் கல்யாண் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அவர் நன்கொடை அளித்ததைத் தொடர்ந்து பலரும் அது போல நன்கொடை வழங்கி வருகிறார்கள்.