என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
தெலுங்குத் திரையுலகத்தில் முந்தைய வசூல் சாதனைகளை முறியடித்து இரண்டாவது வாரத்தில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்துள்ளது 'உப்பெனா'. புச்சிபாபு சனா இயக்கத்தில் வைஷ்ணவ் தேஜ், கிரித்தி ஷெட்டி, விஜய் சேதுபதி மற்றும் பலர் நடித்த இப்படம் வெளிவந்து ஒரு வாரமாகி உள்ளது. இந்த ஒரு வாரத்தில் 70 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதற்கு முன்பு புதுமுகங்கள் நடித்து வெளிவந்த படம் எதுவும் இந்த அளவிற்கு வசூல் செய்ததில்லையாம். சில தினங்களுக்கு முன்பு படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தையும் நடத்திவிட்டார்கள். படக்குழுவினர் சில ஊர்களில் தியேட்டர்களுக்கும் சென்று ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வந்தார்கள்.
இப்படத்தில் நடித்துள்ள வைஷ்ணவ் தேஜ், கிரித்தி ஷெட்டி, விஜய் சேதுபதி ஆகியோருக்கு தெலுங்கில் அடுத்து நிறைய பட வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே தமிழில் நிறைய படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி இனி தெலுங்கிற்காகவும் தனது தேதிகளை ஒதுக்க வேண்டி வரும்.
இயக்குனர் புச்சிபாபுவிற்கு தெலுங்கில் அதிக டிமான்ட் ஏற்பட்டுவிட்டதாம். உணர்சிச்சிபூர்வமாக படத்தைக் கொடுத்த அவரை பல தயாரிப்பாளர்கள் தொடர்பு கொண்டு வருகிறார்களாம்.