தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தெலுங்குத் திரையுலகத்தில் முந்தைய வசூல் சாதனைகளை முறியடித்து இரண்டாவது வாரத்தில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்துள்ளது 'உப்பெனா'. புச்சிபாபு சனா இயக்கத்தில் வைஷ்ணவ் தேஜ், கிரித்தி ஷெட்டி, விஜய் சேதுபதி மற்றும் பலர் நடித்த இப்படம் வெளிவந்து ஒரு வாரமாகி உள்ளது. இந்த ஒரு வாரத்தில் 70 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதற்கு முன்பு புதுமுகங்கள் நடித்து வெளிவந்த படம் எதுவும் இந்த அளவிற்கு வசூல் செய்ததில்லையாம். சில தினங்களுக்கு முன்பு படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தையும் நடத்திவிட்டார்கள். படக்குழுவினர் சில ஊர்களில் தியேட்டர்களுக்கும் சென்று ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வந்தார்கள்.
இப்படத்தில் நடித்துள்ள வைஷ்ணவ் தேஜ், கிரித்தி ஷெட்டி, விஜய் சேதுபதி ஆகியோருக்கு தெலுங்கில் அடுத்து நிறைய பட வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே தமிழில் நிறைய படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி இனி தெலுங்கிற்காகவும் தனது தேதிகளை ஒதுக்க வேண்டி வரும்.
இயக்குனர் புச்சிபாபுவிற்கு தெலுங்கில் அதிக டிமான்ட் ஏற்பட்டுவிட்டதாம். உணர்சிச்சிபூர்வமாக படத்தைக் கொடுத்த அவரை பல தயாரிப்பாளர்கள் தொடர்பு கொண்டு வருகிறார்களாம்.