எந்த மாற்றமும் தெரியவில்லை : கீர்த்தி சுரேஷ் | ராம்சரணின் அடுத்த படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்! | வருகிற மார்ச் 24ம் தேதி நாகார்ஜுனா - அமலா தம்பதியின் மகன் அகில் திருமணம்! | இது சாமி விஷயம்- நறுக் பதில் கொடுத்த யோகி பாபு! | என்னை வியக்க வைத்த தனுஷ் - சேகர் கம்முலா! | 'நிறம் மாறும் உலகில்' படத்தில் 4 கதைகள் | பிளாஷ்பேக் : ஒரே ஹாலிவுட் படத்தை காப்பி அடித்து உருவான இரண்டு தமிழ் படங்கள் | பிளாஷ்பேக் : சொக்கலிங்கம் 'பாகவதர்' ஆனது இப்படித்தான் | சாய் பல்லவிக்கு கிடைத்த ஆசீர்வாதம்! | இந்தியா பசுமையை இழந்து விட்டதால் நியூசிலாந்தில் 'கண்ணப்பா'வை படமாக்கினோம் : விஷ்ணு மஞ்சு |
தெலுங்குத் திரையுலகத்தில் முந்தைய வசூல் சாதனைகளை முறியடித்து இரண்டாவது வாரத்தில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்துள்ளது 'உப்பெனா'. புச்சிபாபு சனா இயக்கத்தில் வைஷ்ணவ் தேஜ், கிரித்தி ஷெட்டி, விஜய் சேதுபதி மற்றும் பலர் நடித்த இப்படம் வெளிவந்து ஒரு வாரமாகி உள்ளது. இந்த ஒரு வாரத்தில் 70 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதற்கு முன்பு புதுமுகங்கள் நடித்து வெளிவந்த படம் எதுவும் இந்த அளவிற்கு வசூல் செய்ததில்லையாம். சில தினங்களுக்கு முன்பு படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தையும் நடத்திவிட்டார்கள். படக்குழுவினர் சில ஊர்களில் தியேட்டர்களுக்கும் சென்று ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வந்தார்கள்.
இப்படத்தில் நடித்துள்ள வைஷ்ணவ் தேஜ், கிரித்தி ஷெட்டி, விஜய் சேதுபதி ஆகியோருக்கு தெலுங்கில் அடுத்து நிறைய பட வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே தமிழில் நிறைய படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி இனி தெலுங்கிற்காகவும் தனது தேதிகளை ஒதுக்க வேண்டி வரும்.
இயக்குனர் புச்சிபாபுவிற்கு தெலுங்கில் அதிக டிமான்ட் ஏற்பட்டுவிட்டதாம். உணர்சிச்சிபூர்வமாக படத்தைக் கொடுத்த அவரை பல தயாரிப்பாளர்கள் தொடர்பு கொண்டு வருகிறார்களாம்.