ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
ஜீத்து ஜோசப் இயக்கத்தில், மோகன்லால், மீனா நடித்த 'த்ரிஷ்யம் 2' படம் நேற்று ஓடிடி தளத்தில் வெளியானது. படத்தைப் பார்த்த ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் அனைவரும் படத்தைப் பாராட்டியுள்ளனர். அதனால் மகிழ்ச்சியடைந்த மோகன்லால் தனது நன்றியை டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
“த்ரிஷ்யம் 2' படத்திற்குக் கிடைத்த மகத்தான வரவேற்பால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளேன். பலரும் படத்தைப் பார்த்துள்ளது என நெகிழ வைத்துவிட்டது. பலர் தொலைபேசியில் தொடர்பு கொள்கிறார்கள், மெசேஜ் அனுப்புகிறார்கள். உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்கள் எப்போதும் சிறந்த படைப்புகளுக்கு ஆதரவளிப்பார்கள். அதற்கு த்ரிஷ்யம் 2 படமும் ஒரு சான்றாகும்.
சினிமா ரசிகர்களின் இந்தத் தொடர்ச்சியான அன்பும், ஆதரவும் எங்களை இன்னும் மேம்படுத்திக் கொள்ளவும், தூண்டுகோலாக இருக்க வைக்கிறது. உங்கள் அனைவரின் அன்புக்கும் மனமார்ந்த நன்றி. த்ரிஷ்யம் குழுவினருக்கு இது நிறைய அர்த்தத்தைக் கொடுக்கும்,” என்று தெரிவித்துள்ளார்.
இந்தப் படம் தியேட்டர்களில் வெளியாகாமல் ஓடிடி தளத்தில் வெளியானதற்கு ஏற்கெனவே கேரள மாநில தியேட்டர்காரர்கள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. படம் மட்டும் தியேட்டர்களில் வெளியாகியிருந்தால் மிகப் பெரும் வசூலைக் குவித்திருக்கும் என்கிறார்கள்.
சொந்தமாகத் தியேட்டர்களை வைத்திருக்கும் மோகன்லால் இப்படி படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட்டது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.