10 நாட்களில் ரூ.25 கோடி வசூலைக் கடந்த ‛வித் லவ்' | மரகதநாணயம் 2 படம் தொடங்கியது | கில்லி மீண்டும் ரீ ரிலீஸ் ஆகிறது : மங்கத்தா சாதனையை முறியடிக்குமா? | இனி காமெடி படம் மட்டுமே...? இயக்குனர் பொன்ராம் முடிவு | சிவகார்த்திகேயனின் ‛சேயோன்' | பூவே உனக்காக படம் பிரசாந்த் நடிக்க வேண்டியதா? | இயக்குனர் விஜய்க்கு மறுவாழ்வு தருமா 'காதல்' | இப்ப வருமோ…எப்ப வருமோ….'ஜனநாயகன்' | இயக்குனர்கள் அடிமையாக இருக்கக் கூடாது : புது நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் ஆர்கே செல்வமணி பேச்சு | பா.ஜ., தலைவரின் பேச்சுக்கு திரிஷா கண்டனம் : வருத்தம் தெரிவித்த நயினார் நாகேந்திரன் |

ஜீத்து ஜோசப் இயக்கத்தில், மோகன்லால், மீனா நடித்த 'த்ரிஷ்யம் 2' படம் நேற்று ஓடிடி தளத்தில் வெளியானது. படத்தைப் பார்த்த ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் அனைவரும் படத்தைப் பாராட்டியுள்ளனர். அதனால் மகிழ்ச்சியடைந்த மோகன்லால் தனது நன்றியை டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
“த்ரிஷ்யம் 2' படத்திற்குக் கிடைத்த மகத்தான வரவேற்பால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளேன். பலரும் படத்தைப் பார்த்துள்ளது என நெகிழ வைத்துவிட்டது. பலர் தொலைபேசியில் தொடர்பு கொள்கிறார்கள், மெசேஜ் அனுப்புகிறார்கள். உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்கள் எப்போதும் சிறந்த படைப்புகளுக்கு ஆதரவளிப்பார்கள். அதற்கு த்ரிஷ்யம் 2 படமும் ஒரு சான்றாகும்.
சினிமா ரசிகர்களின் இந்தத் தொடர்ச்சியான அன்பும், ஆதரவும் எங்களை இன்னும் மேம்படுத்திக் கொள்ளவும், தூண்டுகோலாக இருக்க வைக்கிறது. உங்கள் அனைவரின் அன்புக்கும் மனமார்ந்த நன்றி. த்ரிஷ்யம் குழுவினருக்கு இது நிறைய அர்த்தத்தைக் கொடுக்கும்,” என்று தெரிவித்துள்ளார்.
இந்தப் படம் தியேட்டர்களில் வெளியாகாமல் ஓடிடி தளத்தில் வெளியானதற்கு ஏற்கெனவே கேரள மாநில தியேட்டர்காரர்கள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. படம் மட்டும் தியேட்டர்களில் வெளியாகியிருந்தால் மிகப் பெரும் வசூலைக் குவித்திருக்கும் என்கிறார்கள்.
சொந்தமாகத் தியேட்டர்களை வைத்திருக்கும் மோகன்லால் இப்படி படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட்டது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.




