ஷாருக்கானை தொடர்ந்து சல்மான்கானுக்கு ஜோடியாகும் நயன்தாரா | ஹன்சிகா - சோஹைல் விவாகரத்து: 4 ஆண்டுகளில் முடிவுக்கு வந்த திருமண வாழ்க்கை | லாபத்தில் பங்காக சம்பளம் : ராதிகா பெருமிதம் | விஜயும் யோசித்திருப்பார்.. திரிஷாவுக்கு வாழ்த்துகள்..: பார்த்திபன் 2வது வீடியோ | மேக்கப் போடுவதில் எனக்கு ஆர்வம் கிடையாது : சாரா அர்ஜுன் | நடிகை பாலியல் வழக்கு : கேரளா அரசு மேல்முறையீடுக்கு திலீப் உள்ளிட்ட நால்வருக்கு நோட்டீஸ் | நயன்தாரா, கவின் நடிக்கும் ஹாய் படத்தின் போஸ்டர் வெளியானது | என் அப்பா நினைவுக்கு வந்தார் : தாய் கிழவி வெற்றி விழாவில் கண் கலங்கிய சிவகார்த்திகேயன் | 7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது! | ரிலீஸாகி எட்டு மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் சித்தாரே ஜமீன் பர் |

ஜீத்து ஜோசப் இயக்கத்தில், மோகன்லால், மீனா நடித்த 'த்ரிஷ்யம் 2' படம் நேற்று ஓடிடி தளத்தில் வெளியானது. படத்தைப் பார்த்த ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் அனைவரும் படத்தைப் பாராட்டியுள்ளனர். அதனால் மகிழ்ச்சியடைந்த மோகன்லால் தனது நன்றியை டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
“த்ரிஷ்யம் 2' படத்திற்குக் கிடைத்த மகத்தான வரவேற்பால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளேன். பலரும் படத்தைப் பார்த்துள்ளது என நெகிழ வைத்துவிட்டது. பலர் தொலைபேசியில் தொடர்பு கொள்கிறார்கள், மெசேஜ் அனுப்புகிறார்கள். உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்கள் எப்போதும் சிறந்த படைப்புகளுக்கு ஆதரவளிப்பார்கள். அதற்கு த்ரிஷ்யம் 2 படமும் ஒரு சான்றாகும்.
சினிமா ரசிகர்களின் இந்தத் தொடர்ச்சியான அன்பும், ஆதரவும் எங்களை இன்னும் மேம்படுத்திக் கொள்ளவும், தூண்டுகோலாக இருக்க வைக்கிறது. உங்கள் அனைவரின் அன்புக்கும் மனமார்ந்த நன்றி. த்ரிஷ்யம் குழுவினருக்கு இது நிறைய அர்த்தத்தைக் கொடுக்கும்,” என்று தெரிவித்துள்ளார்.
இந்தப் படம் தியேட்டர்களில் வெளியாகாமல் ஓடிடி தளத்தில் வெளியானதற்கு ஏற்கெனவே கேரள மாநில தியேட்டர்காரர்கள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. படம் மட்டும் தியேட்டர்களில் வெளியாகியிருந்தால் மிகப் பெரும் வசூலைக் குவித்திருக்கும் என்கிறார்கள்.
சொந்தமாகத் தியேட்டர்களை வைத்திருக்கும் மோகன்லால் இப்படி படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட்டது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.




