கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் |
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை தமிழ்நாட்டில் தியேட்டர்கள் மூடப்பட்டன. அதன்பின் 50 சதவீத இருக்கைகளுடன் திறக்கப்பட்ட தியேட்டர்களுக்கு பெரிய வரவேற்பில்லை.
விஜய் நடித்த 'மாஸ்டர்' படம் வெளிவந்த பிறகுதான் 50 சதவீதத்தில் அனைத்துத் தியேட்டர்களும் நிரம்பின. அடுத்து இந்த மாதத்திலிருந்து தான் மீண்டும் 100 சதவீத இருக்கைகளுக்கு அரசு அனுமதி வழங்கியது. இருந்தாலும் எந்தத் தியேட்டரிலும் அனைத்து இருக்கைகளும் நிரம்பி வழிந்து ஹவுஸ்புல் போர்டு மாட்டப்படவில்லை.
ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு நேற்று தியேட்டர்கள் ஹவுஸ்புல் ஆனதாக சில தியேட்டர்காரர்கள் தெரிவித்துள்ளனர். சென்னை வடபழனியின் பிரபலமான தியேட்டரான கமலா தியேட்டர் இரண்டு தியேட்டர்களைக் கொண்டது. இரண்டு தியேட்டர்களுக்கும் சேர்த்து 1000 இருக்கைகள் நேற்று முழுவதுமாக நிரம்பியதாகத் தெரிவித்துள்ளார்கள்.
“1000 டிக்கெட்டுகள் முழுவதுமாக விற்றுவிட்டன. ஹவுஸ்புல் போர்டு பார்க்க ஆனந்தக் கண்ணீர்,” எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.