தெலுங்குத் திரையுலகினர் மீது பவன் கல்யாண் கோபம் | கலாம் கதையை படமாக்குவது சவால்: இயக்குனர் ஓம் ராவத் | அரசியல் சீன், டயலாக் உருவாக்கி கொடுத்த நடிகர் | ரோஜாஸ்ரீயின் அழகு ரகசியம் | ‛‛கமல் ஒரு ஏணி; அவரை மதித்து மேலே செல்வேன், மிதித்து அல்ல'': சிம்பு | 'கேம் சேஞ்ஜர்' அனுபவம் ஒரு 'பயங்கரம்' - விலகிய எடிட்டர் பேச்சு | பிளாஷ்பேக்: மலைக்க வைக்கும் 50வது ஆண்டில் “மயங்குகிறாள் ஒரு மாது” | ஜூன் மாதத்தில் ‛சர்தார் 2' படப்பிடிப்பு முடியும் ; மாளவிகா மோகனன் | காதலிக்க நேரமில்லை, தில், ராட்சசன் - ஞாயிறு திரைப்படங்கள் | நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி |
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை தமிழ்நாட்டில் தியேட்டர்கள் மூடப்பட்டன. அதன்பின் 50 சதவீத இருக்கைகளுடன் திறக்கப்பட்ட தியேட்டர்களுக்கு பெரிய வரவேற்பில்லை.
விஜய் நடித்த 'மாஸ்டர்' படம் வெளிவந்த பிறகுதான் 50 சதவீதத்தில் அனைத்துத் தியேட்டர்களும் நிரம்பின. அடுத்து இந்த மாதத்திலிருந்து தான் மீண்டும் 100 சதவீத இருக்கைகளுக்கு அரசு அனுமதி வழங்கியது. இருந்தாலும் எந்தத் தியேட்டரிலும் அனைத்து இருக்கைகளும் நிரம்பி வழிந்து ஹவுஸ்புல் போர்டு மாட்டப்படவில்லை.
ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு நேற்று தியேட்டர்கள் ஹவுஸ்புல் ஆனதாக சில தியேட்டர்காரர்கள் தெரிவித்துள்ளனர். சென்னை வடபழனியின் பிரபலமான தியேட்டரான கமலா தியேட்டர் இரண்டு தியேட்டர்களைக் கொண்டது. இரண்டு தியேட்டர்களுக்கும் சேர்த்து 1000 இருக்கைகள் நேற்று முழுவதுமாக நிரம்பியதாகத் தெரிவித்துள்ளார்கள்.
“1000 டிக்கெட்டுகள் முழுவதுமாக விற்றுவிட்டன. ஹவுஸ்புல் போர்டு பார்க்க ஆனந்தக் கண்ணீர்,” எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.