பிப்ரவரி மாதத்தில் மோதும் விக்ரம், சூர்யா படங்கள் | பிரம்மயுகம் படத்திற்கு ஆஸ்கர் அங்கீகாரம் | 'பராசக்தி' என் கேரியரில் மறக்க முடியாத படம் : ஸ்ரீலீலா மகிழ்ச்சி | நடிகை ஆன கபடி வீராங்கனை | பிளாஷ்பேக : சிற்பி மனதில் ஏற்பட்ட காயம் | பிளாஷ்பேக்: ஹீரோவின் தந்தையாக நடித்த சிவாஜி | துரந்தர் பட பிரமாண்ட வெற்றி : சிஷ்யனை பாராட்டிய இயக்குனர் பிரியதர்ஷன் | 23 ஆண்டுகள் கழித்து ஒக்கடு பட இயக்குனருடன் இணைந்த பூமிகா | தி ராஜா சாப் : ஆச்சரியப்படுத்திய அம்மு அபிராமி.. அதிர்ச்சி கொடுத்த கயல் ஆனந்தி | தனுஷ் 54வது படத்தின் டப்பிங் பணி துவங்கியது |

சுசீந்திரன் இயக்கத்தில், சிலம்பரசன், நிதி அகர்வால், நந்திதா ஸ்வேதா மற்றும் பலர் நடித்த 'ஈஸ்வரன்' படத்தை தமிழ்நாட்டில் தியேட்டர்களில் வெளியாகும் ஜனவரி 14ம் தேதியன்றே, வெளிநாடுகளில் ஓடிடியில் வெளியிடப் போவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.
அதையடுத்து படத்தை தமிழ்நாட்டில் வெளியிடப் போவதில்லை என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கச் செயலாளர் ரோகிணி பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
அதன் காரணமாக தற்போது 'ஈஸ்வரன்' படத் தயாரிப்பு நிறுவனமான மாதவ் மீடியா வெளிநாடு ஓடிடி வெளியீட்டை நிறுத்துவதாக அறிவித்துவிட்டது.
“தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க வேண்டுகோளின்படி தியேட்டர் அனுபவத்தை ஒதுக்கித் தள்ளவில்லை. ஈஸ்வரன் படத்தை வெளிநாடுகளில் ஓடிடி மூலம் வெளியிடுவதாக நாங்கள் எடுத்த முடிவு துரதிர்ஷ்டவசமானது. ஓடிடியில் வெளியிடுவதை நிறுத்தி வைக்கிறோம். திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் எங்களுக்கு மேலும் தியேட்டர்களைக் கொடுத்து ஆதரிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்,” எனத் தெரிவித்துள்ளனர்.