பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

ஒரு திரைப்படத்தில் தவறு நடந்தால், அநியாயம் நடந்தால் அதில் ஹீரோ தட்டிக் கேட்பார். ஆனால், அதே படம் தியேட்டர்களில் வெளியாகும் போது அநியாய விலைக்கு அந்தப் படத்தின் டிக்கெட் கட்டணம் இருந்தால் அதில் நடிக்கும் ஹீரோக்கள் தட்டிக் கேட்கவே மாட்டார்கள். இதுதான் நிழல் ஹீரோக்களின் நிலை.
விஜய் நடித்து நாளை மறுதினம் வெளிவர உள்ள 'மாஸ்டர்' படத்தில் விஜய் கல்லூரி பேராசியராக நடிக்கிறார். மாணவர்களுக்கு நல்லதைக் கற்றுத் தரும் ஒரு கதாபாத்திரம். அதாவது அது நிழல். நிஜத்தில் அதே 'மாஸ்டர்' படத்தின் டிக்கெட் கட்டணம் 1000, 2000 என தியேட்டர்களில் பிளாக்கில் விற்கப்படுவதாகத் தகவல். உபதேசம் என்பது திரையில் மட்டும்தான், நிஜத்திற்கு அல்ல என்பதை அனைத்து சினிமா ஹீரோக்களும் தவறாமல் பின்பற்றி வருகிறார்கள்.
கொரோனா தொற்று தளர்வுகளுக்குப் பிறகு வெளிவரும் முதல் பெரிய திரைப்படம் 'மாஸ்டர்'. கொரோனா பயத்தால் மக்கள் தியேட்டர்களுக்கு வரவில்லை என்பதுதான் கடந்த இரண்டு மாதத்திய நிலை. ஆனால், 'மாஸ்டர்' படத்திற்கு டிக்கெட்டுகளுக்கு டிமாண்ட் அதிகம் இருக்கிறதாம். 50 சதவீத இருக்கைகளுக்குத்தான் அனுமதி என்பதே அதற்குக் காரணம்.
பலரும் அதிக விலை கொடுத்து டிக்கெட்டுகளை வாங்கத் தயாராக இருக்கிறார்களாம். எனவே, ரசிகர் மன்றக் காட்சிகள் என்ற போர்வையில் சில தியேட்டர்களிலேயே 1000, 2000 என விற்கப்படுகிறதாம். மேலும், ஒரு நாளைக்கு 6 காட்சிகள் வரை படத்தைத் திரையிட ஏற்பாடு நடக்கிறதாம்.
100 சதவீத அனுமதியிலிருந்து அரசு பின்வாங்கி 50 சதவீதம் மட்டுமே அனுமதி வழங்கியது. எனவே, டிக்கெட் கட்டண விவகாரத்தில் கண்டும் காணாமல் அரசு தரப்பு இருக்கிறது என்கிறார்கள்.