'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா தாக்கம் ஆரம்பித்த உடனேயே நாடு முழுவதும் உள்ள தியேட்டர்களை உடனடியாக மூட மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்பின் அக்டோபர் மாதத்தில்தான் தியேட்டர்களை மீண்டும் திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. ஆனால், 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி, பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுதல் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் நவம்பர் 10ம் தேதி தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்பட்டன.
பக்கத்து மாநிலமான கேரளாவில் ஜனவரி 5 முதல் தியேட்டர்களை 50 சதவீத பார்வைகயார்களுடன் திறந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும் தியேட்டர்காரர்கள் ஜனவரி 13 அன்று 'மாஸ்டர்' படத்தைத் திரையிடுவதுடன் தியேட்டர்களைத் திறக்க முடிவெடுத்திருந்தனர்.
அதே சமயம், கொரோனா காலத்தில் மூடுப்பட்டிருந்த தியேட்டர்களுக்கு வரி விலக்கு, மின் கட்டண சலுகை ஆகியவற்றிற்குக் கோரிக்கை வைத்திருந்தனர். மேலும், ஜிஎஸ்டி, கேளிக்கை வரி, செஸ் வரி ஆகியவற்றையும் செலுத்தி 50 சதவீத இருக்கைகளை மட்டுமே வைத்து தியேட்டர்களைத் திறந்தால் அது தங்களுக்கு லாபகரமாக இருக்காது என கேரள பிலிம் சேம்பர் முடிவு செய்தது. எனவே, தியேட்டர்களைத் திறக்காமல் தொடர்ந்து மூடியே வைப்பது என முடிவெடுத்துள்ளனர்.
இதன் காரணமாக கேரளாவில் ஜனவரி 13 முதல் 'மாஸ்டர்' படத்தைத் திரையிட சிக்கல் எழுந்துள்ளது. தமிழ்நாட்டை அடுத்து கேரளாவில் தான் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம். அங்கு சுமார் 200 தியேட்டர்கள் வரையிலும் படத்தைத் திரையிட முடிவு செய்திருந்தனர்.
தமிழ்நாட்டில் மீண்டும் 50 சதவீத இருக்கைகளுக்குத் தான் அரசு அனுமதி அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், கேரளாவில் தியேட்டர்கள் திறக்கப்படாததும் 'மாஸ்டர்' வெளியீட்டிற்குப் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.