22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தானா. தமிழில் கார்த்தி நடிக்கும் 'சுல்தான்' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார்.
கர்நாடகாவைச் சேர்ந்த ராஷ்மிகா தெலுங்குப் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ஐதராபாத்தில் வீடு வாங்கி அங்கேயே தங்கி நடித்து வருகிறார். படப்பிடிப்புகளுக்கு செல்வதற்கு தயாரிப்பு நிறுவனங்கள் அளித்த காரில் சென்று வந்தவர், தற்போது சொந்தமாக புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
ரேன்ச் ரோவர் காரை வாங்கியுள்ள ராஷ்மிகா அதன் முன் மகிழ்ச்சியுடன் நின்று கொண்டு இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். “பொதுவாக எந்த ஒரு விஷயத்தையும் எனக்குள்ளே வைத்துக் கொள்வேன். ஆனால், இந்த முறை இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இந்தப் பயணத்தில் நீங்களும் ஒரு பங்கு, அதை உங்களுக்கும் தெரியப்படுத்த விரும்பினேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.