அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் |
எண்பது மற்றும் தொண்ணூறுகளின் காலகட்டத்தில் நகைச்சுவையில் கொடிகட்டி பறந்தவர்கள் தான் கவுண்டமணி-செந்தில் இருவரும். இதில் கவுண்டமணி சில படங்களில் ஹீரோவாக நடித்துவிட்டார்.. ஆனால் செந்திலுக்கு அப்படி ஒரு வாய்ப்பு இன்னும் அமையவில்லை. சில வருடங்களுக்கு முன் செந்தில் கதாநாயகனாக நடிக்க, ஆதிவாசியும் அதிசிய பேசியும்' என்கிற படம் அறிவிக்கப்பட்டு பின்னர் கைவிடப்பட்டது.
இந்தநிலையில் இரண்டு வருடங்களுக்கு முன் வெளியாகி பாராட்டு பெற்ற 'ஒரு கிடாரியின் கருணை மனு' படத்தின் இயக்குனர் சுரேஷ் சங்கையா, நடிகர் செந்திலை கதையின் நாயகனாக வைத்து ஒரு புதிய படத்தை இயக்க உள்ளாராம். இந்தப்படத்தில் செந்தில் பல வருட சிறைதண்டனை பெற்ற குற்றவாளியாக நடிக்கிறாராம். மீண்டும் திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் மட்டும் நடிக்க ஆர்வம் காட்டி வந்த செந்திலை, சுரேஷ் சங்கையா சொன்ன கதை கதையின் நாயகனாக நடிக்க உடனே சம்மதிக்க வைத்து விட்டதாம். அருப்புக்கோட்டை அருகில் உள்ள கிராமம் ஒன்றில் வரும் பிப்ரவரி மாதம் இதன் படப்பிடிப்பு துவங்க இருக்கிறதாம்.