மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் | ரஜினி வெளியிட்ட ‛வித் லவ்' |

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் இந்தியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற படம் அந்தாதூன். தற்போது இந்தப்படம் தமிழில் பிரசாந்த் நடிக்க ரீ-மேக் ஆகிறது. இந்நிலையில் அந்தாதூன் படத்தை இயக்கிய இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் அடுத்தததாக விஜய்சேதுபதியை வைத்து இந்தியில் படம் இயக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் ஏற்கனவே பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிப்பில் 'எக்கிஸ்' என்கிற படத்தை இயக்குவதாக இருந்தார். ஆனால் படத்தின் பட்ஜெட் அதிகம் என்பதாலும், இந்த கொரோனா காலகட்டத்தில் அந்தப்படத்தை எடுப்பதில் நிறைய சிரமங்கள் இருப்பதாலும் அந்தப்படம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாம். இந்தநிலையில் தான் விஜய்சேதுபதியை வைத்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படம் ஒன்றை இயக்கம் வேலையை துவங்கிவிட்டாராம் ஸ்ரீராம் ராகவன். விஜய்சேதுபதியும் இதற்கு கிரீன் சிக்னல் காட்டிவிட்டாராம்.
சமீபத்தில் தான் விஜய்சேதுபதி முதன்முதலாக இந்தியில் நடிக்கும் 'மும்பைகார்' என்கிற படத்தின் அறிவிப்பு வெளியான நிலையில், இப்படி ஒரு செய்தி வெளியாகியுள்ளது விஜய்சேதுபதி குறித்த ஆச்சர்யத்தை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது.




