தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ்நாட்டில் தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி என மாநில அரசு அளித்த உத்தரவு சரியல்ல என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாநில அரசு அதன் உத்தரவைத் திரும்பப் பெறும் எனத் தெரிகிறது. இன்று அதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, மாநில அரசு தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கினால் 'மாஸ்டர்' படத்தை மட்டுமே திரையிடும் முடிவில் தியேட்டர்காரர்கள் வந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. பொங்கலை முன்னிட்டு வெளியாவதாக அறிவிக்கப்பட்ட 'ஈஸ்வரன்' படத்தை இரண்டு வாரங்களுக்குப் பிறகு திரையிடலாம் என முடிவெடுத்துள்ளார்களாம்.
50 சதவீத இருக்கைகளில் இரண்டு படங்கள் போட்டியிடுவது சரியல்ல. முதலில் பட வெளியீட்டை அறிவித்த 'மாஸ்டர்' படத்திற்கு முன்னுரிமை கொடுக்கவும், அப்படம் வெளிவரும்பட்சத்தில் மக்கள் தியேட்டர்களுக்கு அதிகம் வருவார்கள் என்றும் தியேட்டர்காரர்கள் கருதுகிறார்களாம்.
இந்த யோசனைக்கு 'ஈஸ்வரன்' தயாரிப்பாளர் முன்வருவாரா என்பதுதான் இப்போதைய கேள்வி. அவரும் ஜனவரி 14 அன்று படத்தை வெளியிட கடந்த ஒரு வாரமாகவே விளம்பரப்படுத்தி வருகிறார். இப்போது படம் வரவில்லை என்றால் விளம்பரம் செய்த அந்த நஷ்டத்தை யார் ஏற்றுக் கொள்வது என்ற கேள்வி வரும்.
சூழ்நிலைக்கேற்ப தியேட்டர் சங்கத்தினர் முடிவெடுத்துக் கொள்ள அதன் உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் தகவல். இதனால், 'மாஸ்டர்' படம் ஜனவரி 13 அன்று வெளிவருவது உறுதி என்றே சொல்கிறார்கள்.