சினிமாவில் எதுவும் நிரந்தரமில்லை! : நந்திதா | அனுஷ்கா பிறந்தநாளில் வெளியான 'கதனார்' படத்தின் அழகிய போஸ்டர்! | யஷ் படத்துடன் மோதுவதில் பயமில்லை : தெலுங்கு இளம் ஹீரோ தில் பேச்சு | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்திலிருந்து வெளியான பிரித்விராஜ் முதல்பார்வை | கமலின் 'நாயகன்' படத்தின் ரீரிலீஸுக்கு தடை விதிக்க மறுத்த நீதிமன்றம்! | கத்ரினா கைப் - விக்கி கவுஷல் நட்சத்திர தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | உருவக்கேலி செய்ததாக நடிகை கவுரி கிஷன் வேதனை | கமல் 237வது படத்தில் இணைந்த தொழில்நுட்ப கலைஞர்கள் | எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்காதீங்க : அஜித் | தெலுங்கிலும் இன்று வெளியான பிரணவ் மோகன்லால் ஹாரர் படம் |

உலக திரைப்படத் துறையின் உயரிய விருதாகக் கருதப்படுவது ஆஸ்கர் விருது. 2025ல் வெளியாகும் படங்களுக்கான 98வது ஆஸ்கர் விருது விழா அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெற உள்ளது.
இந்த ஆண்டிற்கான ஆஸ்கர் அகாடமியின் உறுப்பினராக இணைந்து கொள்ள நடிகர் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதற்கு அரசியல் பிரமுர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
ஆந்திர மாநில துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண், கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில், “இந்தியத் திரைப்படத் துறைக்கு மிகுந்த பெருமை சேர்க்கும் தருணம், பத்மபூஷன் கமல்ஹாசன் அவர்கள், மதிப்பு மிக்க அகாடமி விருதுகள் 2025 குழுவின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஆறு தசாப்தங்களாக ஒரு அற்புதமான நடிப்புத் தொழிலைக் கொண்ட கமல்ஹாசன் ஒரு நடிகர் என்பதை விட மேலானவர். ஒரு நடிகராக, கதை சொல்பவராக மற்றும் இயக்குனராக அவரது புத்திசாலித்தனம், அவரது பல்துறை திறமை மற்றும் பல தசாப்த கால அனுபவத்துடன் இந்திய மற்றும் உலகளாவிய சினிமாவில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
எழுத்தாளர், பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என திரைப்படத் தயாரிப்பின் ஒவ்வொரு அம்சத்திலும் அவரது விதிவிலக்கான ஆளுமை உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது. அவர் கலைத் துறையின் மாஸ்டர்.
அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், அவர் உலக சினிமாவிற்கு இன்னும் பல ஆண்டுகள் தாக்கத்தை ஏற்படுத்தும் சேவையை வழங்க வாழ்த்துகிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.