பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

உலக திரைப்படத் துறையின் உயரிய விருதாகக் கருதப்படுவது ஆஸ்கர் விருது. 2025ல் வெளியாகும் படங்களுக்கான 98வது ஆஸ்கர் விருது விழா அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெற உள்ளது.
இந்த ஆண்டிற்கான ஆஸ்கர் அகாடமியின் உறுப்பினராக இணைந்து கொள்ள நடிகர் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதற்கு அரசியல் பிரமுர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
ஆந்திர மாநில துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண், கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில், “இந்தியத் திரைப்படத் துறைக்கு மிகுந்த பெருமை சேர்க்கும் தருணம், பத்மபூஷன் கமல்ஹாசன் அவர்கள், மதிப்பு மிக்க அகாடமி விருதுகள் 2025 குழுவின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஆறு தசாப்தங்களாக ஒரு அற்புதமான நடிப்புத் தொழிலைக் கொண்ட கமல்ஹாசன் ஒரு நடிகர் என்பதை விட மேலானவர். ஒரு நடிகராக, கதை சொல்பவராக மற்றும் இயக்குனராக அவரது புத்திசாலித்தனம், அவரது பல்துறை திறமை மற்றும் பல தசாப்த கால அனுபவத்துடன் இந்திய மற்றும் உலகளாவிய சினிமாவில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
எழுத்தாளர், பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என திரைப்படத் தயாரிப்பின் ஒவ்வொரு அம்சத்திலும் அவரது விதிவிலக்கான ஆளுமை உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது. அவர் கலைத் துறையின் மாஸ்டர்.
அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், அவர் உலக சினிமாவிற்கு இன்னும் பல ஆண்டுகள் தாக்கத்தை ஏற்படுத்தும் சேவையை வழங்க வாழ்த்துகிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.