அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? |
நீண்ட போராட்டத்திற்கு பிறகு நடிகர் அருண் விஜய் தற்போது பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அறிவழகன் இயக்கத்தில் இவர் நடிக்கும் படத்தில் ரெஜினா நாயகியாக நடிக்கிறார். இன்னொரு நாயகி நடிக்க நடிகை தேர்வு நடப்பதாக ஒரு விளம்பரம் வெளியாகி உள்ளது. இதுகுறித்த தகவல் தனது கவனத்திற்கு வர சமூகவலைதளத்தில், ''எனது பெயரை வைத்து நடிகர்கள் தேர்வு நடப்பதாக ஒரு பொய்யான அறிக்கை வெளியிட்டுள்ளனர். போலி நபர்கள் பெண்களை குறி வைத்து இது போன்று செய்கின்றன, எச்சரிக்கை தேவை. இதுகுறித்து சைபர் கிரைமிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது'' என அருண் விஜய் தெரிவித்துள்ளார்.