‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி |
அழகி, சொல்ல மறந்த கதை, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு போன்ற குடும்ப படங்களை இயக்கிய டைரக்டர் தங்கர் பச்சான், தற்போது அம்மாவின் கைப்பேசி என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில், பாக்யராஜ் - பூர்ணிமா தம்பதிகளின் மகன் சாந்தனு கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக இனியா நடிக்கிறார். படத்தில், இரண்டு பேருக்கும் முத்த காட்சி இருக்கிறது. சாந்தனுவின் உதட்டில் இனியா முத்தம் கொடுப்பது போல் அந்த காட்சி பரபரப்பாக படமாக்கப்பட்டு இருக்கிறது.
இதுபற்றி டைரக்டர் தங்கர்பச்சான் அளித்த பேட்டியில், ஒரு கிராமத்தில், 8 பிள்ளைகள் பெற்ற ஒரு தாயின் கதை இது. கதைப்படி, எட்டாவதாக பிறந்த கடைசி பிள்ளை, சாந்தனு. அவருடைய மாமா மகள் இனியா. சாந்தனு வேலைக்கு சேர்ந்து முதல் மாத சம்பளத்தில் தனது முறைப்பெண்ணுக்கு உள்ளாடைகள் வாங்கிக்கொண்டு அவளுக்கு பரிசளிக்க செல்கிறான். அதை வாங்கிக்கொண்ட இனியா, அன்றைக்கு என்கிட்ட ஏதோ ஒண்ணு கேட்டியே... என்ன அது? என்றபடி சாந்தனுவை நெருங்கி உதட்டுடன் உதடு சேர்த்து முத்தம் கொடுக்கிறார். இந்த காட்சியை தத்ரூபமாக படமாக்கியிருக்கிறோம், என்றார்.