சினிமாவில் எதுவும் நிரந்தரமில்லை! : நந்திதா | அனுஷ்கா பிறந்தநாளில் வெளியான 'கதனார்' படத்தின் அழகிய போஸ்டர்! | யஷ் படத்துடன் மோதுவதில் பயமில்லை : தெலுங்கு இளம் ஹீரோ தில் பேச்சு | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்திலிருந்து வெளியான பிரித்விராஜ் முதல்பார்வை | கமலின் 'நாயகன்' படத்தின் ரீரிலீஸுக்கு தடை விதிக்க மறுத்த நீதிமன்றம்! | கத்ரினா கைப் - விக்கி கவுஷல் நட்சத்திர தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | உருவக்கேலி செய்ததாக நடிகை கவுரி கிஷன் வேதனை | கமல் 237வது படத்தில் இணைந்த தொழில்நுட்ப கலைஞர்கள் | எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்காதீங்க : அஜித் | தெலுங்கிலும் இன்று வெளியான பிரணவ் மோகன்லால் ஹாரர் படம் |

பா விஜய் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில், ஜீவா, ராஷி கண்ணா, அர்ஜுன் மற்றும் பலர் நடிக்கும் படம் 'அகத்தியா'. பிப்ரவரி 28ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தில் இளையராஜாவின் இசையில் வெளிவந்த 'மூடுபனி' படத்திலிருந்து 'என் இனிய பொன்நிலாவே' பாடலை ரீமிக்ஸ் செய்து வெளியிட்டிருந்தார்கள்.
அப்பாடலின் உரிமை தங்களிடம் உள்ளது, அனுமதியில்லாமல் பயன்படுத்தி இருக்கிறார்கள் என சரிகம ஆடியோ நிறுவனம் படத் தயாரிப்பாளரான வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் மீது டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது.
விசாரணையின் முடிவில் அப்பாடலை 'அகத்தியா' படத்தில் பயன்படுத்த நீதிமன்றத்தில் 30 லட்ச ரூபாய் செலுத்தினால் அனுமதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. பாடலுக்கான உரிமை சரிகம நிறுவனத்திடம் மட்டுமே உள்ளது. அதன் இசையமைப்பாளர் இளையராஜாவிடம் இல்லை என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
'அகத்தியா படத் தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல், இப்பாடலுக்கான உரிமையை ஒரிஜனல் இசையமைப்பாளரான இளையராஜாவிடம் இருந்து வாங்கியதாக தெரிவித்திருந்தது. இரு தரப்பு ஆதாரங்களையும் ஆராய்ந்த நீதிமன்றம் மேற்கண்ட தீர்ப்பை அளித்துள்ளது.