தனக்காக கட்டிய கல்லறையில் நடிகர் ராஜேஷ் உடல் அடக்கம் | தேசிய விருது பெற்ற தமிழ் இயக்குனர் மீது நடிகை சுர்வீன் சாவ்லா குற்றச்சாட்டு | ஒரு வழியாக வெளியானது 'லால் சலாம்' ஓடிடி அறிவிப்பு? | தெலுங்கானா முதல்வரை சந்தித்து அழைப்பிதழ் தந்த நாகார்ஜுனா, அமலா | சின்மயி Vs தீ, தேவையற்ற சர்ச்சை - மணிரத்னம் கோபம் ? | சிறுமிகளின் ரீல்ஸ்களை த்ரிஷா ஷேர் செய்தது சரியா ? | பிளாஷ்பேக்: 'வேலைக்காரி'யின் சாதனைகள் | திருமலைக்குமாரசாமி கோவிலில் மோகன்லால் தங்க வேல் செலுத்தி தரிசனம் | அல்லு அர்ஜூனுக்கு கத்தார் அரசு விருது | கமல்ஹாசனை பயன்படுத்தி பிரித்தாளும் சூழ்ச்சி நடக்கிறது : நடிகர் சங்கம் அறிக்கை |
பா விஜய் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில், ஜீவா, ராஷி கண்ணா, அர்ஜுன் மற்றும் பலர் நடிக்கும் படம் 'அகத்தியா'. பிப்ரவரி 28ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தில் இளையராஜாவின் இசையில் வெளிவந்த 'மூடுபனி' படத்திலிருந்து 'என் இனிய பொன்நிலாவே' பாடலை ரீமிக்ஸ் செய்து வெளியிட்டிருந்தார்கள்.
அப்பாடலின் உரிமை தங்களிடம் உள்ளது, அனுமதியில்லாமல் பயன்படுத்தி இருக்கிறார்கள் என சரிகம ஆடியோ நிறுவனம் படத் தயாரிப்பாளரான வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் மீது டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது.
விசாரணையின் முடிவில் அப்பாடலை 'அகத்தியா' படத்தில் பயன்படுத்த நீதிமன்றத்தில் 30 லட்ச ரூபாய் செலுத்தினால் அனுமதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. பாடலுக்கான உரிமை சரிகம நிறுவனத்திடம் மட்டுமே உள்ளது. அதன் இசையமைப்பாளர் இளையராஜாவிடம் இல்லை என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
'அகத்தியா படத் தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல், இப்பாடலுக்கான உரிமையை ஒரிஜனல் இசையமைப்பாளரான இளையராஜாவிடம் இருந்து வாங்கியதாக தெரிவித்திருந்தது. இரு தரப்பு ஆதாரங்களையும் ஆராய்ந்த நீதிமன்றம் மேற்கண்ட தீர்ப்பை அளித்துள்ளது.