என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
மறைந்த விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தொடர்பாகவும், இலங்கை போர் தொடர்பாகவும் இதுவரை வெளிவந்த படங்களில் பலர் பிரபாகரனாக நடித்திருக்கிறார்கள். தற்போது, பிரபாகரன் வாழ்க்கையை மையமாக கொண்டு சீறும்புலி என்ற தலைப்பில் ஒரு படம் தயாராகிறது. இதனை வெங்கடேஷ் குமார் என்ற புதுமுக இயக்குனர் இயக்குகிறார்.
பாபி சிம்ஹா பிரபாகரனாக நடிப்பதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பாபி சிம்ஹா, பிரபாகரன் தோற்றத்தில் ஒரு புலியுடன் அமர்ந்திருக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது.
இதில் பாபிசிம்ஹா பிரபாகரன் தோற்றத்தை அப்படியே பிரதிபலிக்கிறார் என்றும், பாபிசிம்ஹாவின் தோற்றம், பிரபாகரன் போன்று இல்லை என்றும் இரு விதமான விமர்சனங்கள் எழுந்துள்ளன.