பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
இசையமைப்பாளர் இளையராஜா, வியந்து பார்த்த இசையமைப்பாளர்களில் எம்.எஸ்.விஸ்வநாதன் முக்கியமானவர். அவருடைய இசையைக் கேட்டுதான் தானும் இசையமைக்க வந்தேன் என ஏற்கெனவே சொல்லியிருக்கிறார். இதுவரை வேறு எந்த இசையமைப்பாளர்களுடனும் இணைந்து இளையராஜா இசையமைத்ததேயில்லை, எம்எஸ்வியைத் தவிர.
இருவரும் இணைந்து “மெல்லத் திறந்தது கதவு, இரும்புப்பூக்கள், செந்தமிழ்ப் பாட்டு, செந்தமிழ்ச் செல்வன், என் இனிய பொன்நிலாவே, விஷ்வ துளசி” ஆகிய படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்கள்.
இப்போது எம்எஸ்விக்கு அடுத்து தன் இளைய மகன் யுவன்சங்கர் ராஜாவுடன் இணைந்து இசையமைக்க சம்மதித்திருக்கிறார். கடந்த சில வருடங்களாகவே இந்தப் படம் பற்றிய பேச்சு இருந்து வந்தது. ஆனால், நேற்றுதான் படம் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
யுவன் தயாரிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க உள்ள இந்தப் படத்திற்கு இளையராஜா - யுவன்ஷங்கர் ராஜா முதல் முறையாக இணைந்து இசையமைக்கிறார்கள். இருவரது ரசிகர்களுக்கும் இந்த அறிவிப்பு மிகவும் மகிழ்ச்சியாக அமைந்துள்ளது.