2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் |

மாநகரம் உட்பட பல படங்களில் நடித்த நடிகர் சந்தீப் கிஷண் “பல ஆண்டுகளுக்குப் பிறகு மறுபடியும் 'புதுப்பேட்டை' படம் பார்த்தேன். ஒவ்வொரு முறையும் ஆச்சரியமாக இருக்கிறது” என டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.
அந்த டுவீட்டை ஷேர் செய்த செல்வராகவன் அவருக்கு நன்றியும் தெரிவித்தார். அந்த டுவீட்டுக்குக் கீழே, 'மாஸ்டர் பீஸ், 'புதுப்பேட்டை' இரண்டாம் பாகத்துக்காக நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம்' என ஒரு ரசிகர்கள் டுவீட் பண்ணியிருந்தார். அதற்கு, “நிச்சயம் நேரம் வரும் ப்ரோ. இது கண்டிப்பாக நடக்கும்” என பதிலளித்துள்ளார் செல்வராகவன்.
செல்வராகவன் இயக்கத்தில் 2006-ம் ஆண்டு ரிலீஸான 'புதுப்பேட்டை' படத்தில், தனுஷ் ஹீரோவாக நடிக்க, சினேகா, சோனியா அகர்வால் கதாநாயகிகளாக நடித்தனர். இந்தப்படம், வெளியாகி 12 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் அதன் இரண்டாம் பாகம் குறித்து அப்டேட் பண்ணியிருக்கிறார் செல்வராகவன்.