பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

கார்த்திக் நரேன் இயக்கியுள்ள இரண்டாவது படம் நரகாசூரன். இந்த படத்தில் அரவிந்த்சாமி, ஸ்ரேயா, சந்தீப் கிஷன், இந்திரஜித், கிட்டி ஆகியோருடன் ஆத்மிகாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு ஊட்டி மலைப் பகுதிகளில் நள்ளிரவு நேரங்களில் தான் நடைபெற்று வந்தது. அப்போது, ஒருநாள் அடர்ந்த மரங்கள் நிறைந்த பகுதியில் படப்பிடிப்பு நடந்தபோது, நரகாசூரனில் முக்கிய கேரக்டர்களில் நடிக்கும் சந்தீப் கிஷன், இந்திரஜித் ஆகிய இருவரும் சில மரங்கள் காற்றில் பயங்கரமாக ஆடியதைக் காண்பித்து அங்கே பேய் இருப்பதாக ஆத்மிகாவை அச்சுறுத்தியிருக்கிறார்கள். இதனால், பயந்து போன ஆத்மிகா, ஊட்டியில் படப்பிடிப்பு நடைபெற்ற ஒவ்வொரு நாள் இரவிலும் பயந்து நடுங்கியபடியே நடித்ததாக சொல்கிறார்.




