ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? |
கார்த்திக் நரேன் இயக்கியுள்ள இரண்டாவது படம் நரகாசூரன். இந்த படத்தில் அரவிந்த்சாமி, ஸ்ரேயா, சந்தீப் கிஷன், இந்திரஜித், கிட்டி ஆகியோருடன் ஆத்மிகாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு ஊட்டி மலைப் பகுதிகளில் நள்ளிரவு நேரங்களில் தான் நடைபெற்று வந்தது. அப்போது, ஒருநாள் அடர்ந்த மரங்கள் நிறைந்த பகுதியில் படப்பிடிப்பு நடந்தபோது, நரகாசூரனில் முக்கிய கேரக்டர்களில் நடிக்கும் சந்தீப் கிஷன், இந்திரஜித் ஆகிய இருவரும் சில மரங்கள் காற்றில் பயங்கரமாக ஆடியதைக் காண்பித்து அங்கே பேய் இருப்பதாக ஆத்மிகாவை அச்சுறுத்தியிருக்கிறார்கள். இதனால், பயந்து போன ஆத்மிகா, ஊட்டியில் படப்பிடிப்பு நடைபெற்ற ஒவ்வொரு நாள் இரவிலும் பயந்து நடுங்கியபடியே நடித்ததாக சொல்கிறார்.