'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் | ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் |

தெலுங்கு நடிகையான ஸ்ரீரெட்டி, தனக்கு படவாய்ப்பு கொடுப்பதாக சொல்லி தன்னை பாலியல் தேவைக்கு பயன்படுத்திக் கொண்டவர்களைப் பற்றி தொடர்ந்து பொதுவெளியில் அம்பலப்படுத்தி வருகிறார்.
தெலுங்குத் திரையுலகத்தை கலங்கடித்த ஸ்ரீரெட்டி, கடந்த சில வாரங்களாக தமிழ்த் திரைப்படத்துறையைச் சேர்ந்தவர்களைப் பற்றியும் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்து வருகிறார்.
ஏ.ஆர்.முருகதாஸ், சுந்தர்.சி, ராகவேந்திரா லாரன்ஸ், நடிகர் ஸ்ரீகாந்த் என தமிழ்த் திரைப்படத்துறையைச் சேர்ந்தவர்களைப்பற்றி பாலியல் புகார் தெரிவித்தார் ஸ்ரீரெட்டி.
அவரது புகார் குறித்து சுந்தர்.சி, ராகவேந்திரா லாரன்ஸ் இருவரும் மறுப்பு தெரிவித்தனர். ஆனால் ஏ.ஆர்.முருகதாஸ், ஸ்ரீகாந்த் இதுவரை கருத்து கூறாமலே அமைதி காத்து வருகிறார்.
இந்நிலையில், #TamilLeaks coming this week wait for it....
Friday - 10 pm.
Saturday - 11 pm.
Sunday -12 am.
என்று டுவிட்டரில் ஸ்ரீரெட்டி அறிவித்திருப்பதாக ஒரு தகவல் பரவி படத்துறையை பதறவைத்தது. இந்நிலையில் ஸ்ரீரெட்டிக்கு டுவிட்டரில் கணக்கு இல்லை என்றும், யாரோ ஸ்ரீரெட்டி பெயரில் போலியான கணக்கை தொடங்கி மிரட்டியுள்ளனர் என்ற தகவல் தெரிய வந்ததும் நிம்மதியடைந்துள்ளனர்.




