மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
விஜய் தொலைக்காட்சியின் நட்சத்திர நிகழ்ச்சி நீயா நானா. பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியை கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார். கோபிநாத்துக்கு தனி அடையாளத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தது. இதன் மூலம் சில சினிமாவிலும் அவர் நடித்தார்.
கோபிநாத் இதுவரை நீயா நானா நிகழ்ச்சி மட்டுமே தொகுத்து வழங்கினார். இதுதவிர மற்ற நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு அழைப்பாளராக சென்றிருக்கிறார். பொது விழாக்களில் பேச்சாளராக கலந்து கொண்டிருக்கிறார். தற்போது நீயா நானா தவிர மற்றொரு புதிய நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்க இருக்கிறார். நிகழ்ச்சியின் பெயர் டிவைடெட்.
இந்த நிகழ்ச்சியில் முன்பின் அறிமுகமில்லாத 3 பேர் பங்கேற்பார்கள். அவர்களுக்கு பொது அறிவு தொடர்பான 15 கேள்விகள் கொடுக்கப்படும் அதற்கான பதிலை 3 பேரும் ஒரே மாதிரியாக சொல்ல வேண்டும். இறுதியில் மூவருக்குமே 50 லட்சம் வரை பரிசு வழங்கப்படும். அந்த பரிசை அவர்கள் சண்டைபோடாமல் பங்கிட்டு கொள்ள வேண்டும். அவர்களுக்குள் மோதல் வந்தாலோ, மூவரில் ஒருவர் சரியான பதிலை சொல்லாவிட்டாலோ அவர்கள் தோல்வி அடைந்தவர்கள் ஆவார்கள்.
விட்டுக்கொடுத்தல், ஒருங்கிணைந்து செயல்படுதல் இதுதான் நிகழ்ச்சின் மைய புள்ளி. விஜய் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமையில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது.