சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
விஜய், அஜித் ஆகியோர் தற்போது நடித்துவரும் படங்களை முடித்துவிட்டு, அடுத்த படத்தை எந்த இயக்குனர்களுக்கு தரப்போகிறார்கள் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.. ஆனால் இந்த விஷயத்தில் சூர்யா தெளிவான அறிவிப்பை தனது ரசிகர்களுக்காக அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துள்ளார்.
தற்போது செல்வராகவன் டைரக்சனில் சூர்யா நடித்துவரும் என்ஜிகே, சூர்யாவின் 36வது படம் இந்தப்படத்திற்காக 50 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.. இன்னும் 25 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்ட இருக்கிறது.
சூர்யாவின் 37வது படத்தை கேவி ஆனந்த் இயக்குகிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன்-23ல் லண்டனில் துவங்க இருக்கிறது. தொடர்ந்து சூர்யாவின் 38வது படத்தை இறுதிச்சுற்று சுதா கொங்கரா இயக்குகிறார். அதையடுத்து சூர்யாவின் 39வது படத்தில் மீண்டும் ஹரியுடன் இணைகிறார். இது சிங்கம் 4-ஆக இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
ஆக, அடுத்த இரண்டு வருடத்திற்கான படங்கள் பற்றி தெளிவான திட்டம் வைத்திருக்கிறார் சூர்யா.