சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
தியா படத்தில் நடித்த சாய் பல்லவி, தற்போது தனுஷூடன் மாரி-2, சூர்யாவுடன் என்ஜிகே ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் என்ஜிகே படத்தில் சூர்யாவுடன் நடிப்பதை மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார் சாய்பல்லவி.
அதாவது, நான் பள்ளியில் படித்த காலத்தில் இருந்தே சூர்யாவின் தீவிரமான ரசிகை. அதனால் அவருடன் என்ஜிகே படத்தில் நடிக்க சான்ஸ் கிடைத்ததும் பெரிய மகிழ்ச்சியடைந்தேன். சூர்யாவுடன் இணைந்து நடிக்க ஆர்வமாக காத்திருந்தேன்.
முதல் நாள் சூர்யாவை நேரில் பார்த்தபோது எனக்கு பேச்சே வரவில்லை. என்ன பேசுவதென்று தெரியாமல் தடுமாறினேன். ஆனால், சூர்யா சாதாரணமாக சிரித்தபடி பேசினார். கேமராவுக்கு வெளியே நார்மலாக இருக்கிறார். கேமரா முன்பு செல்லும்போது முற்றிலுமாக மாறிவிடுகிறார். அவரிடமிருந்து நடிப்பு திறனையும் கற்றுக் கொண்டுள்ளேன் என்கிறார் சாய்பல்லவி.