சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
அஜித் - சிவா மூன்றாவது முறையாக இணைந்த விவேகம் படம் இன்று(ஆகஸ்ட் 24) உலகம் முழுக்க சுமார் 3000 தியேட்டர்களில் வெளியாகியுள்ளது. படத்திற்கு மாறுப்பட்ட விமர்சனம் வந்தாலும் அஜித்தின் ரசிகர்கள் விவேகத்தை கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.
அஜித்திற்கு ரசிகர் மன்றம் என்று எதுவும் கிடையாது. அப்படியிருந்தும் அவரது ரசிகர்கள், படம் வெளியாகும் முதல்நாளை திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர். இப்படி ரசிகர்கள் அஜித் மீது வெறித்தனமாக இருப்பதால் என்னவோ, அஜித்தின் படம் முதல்நாள் வெளியாகும் அன்று டிக்கெட் விலை கண்ணா பின்னா என்று விற்று வருகிறார்கள்.
இன்று வெளியாகியுள்ள விவேகம் படத்தின் டிக்கெட் விலை, அரசு நிர்ணயித்த விலையை விட பல மடங்கு அதிகமாக விற்கப்பட்டுள்ளது. குறிப்பாக கள்ளச்சந்தையில் அதிகாலை காட்சிகள் 500 முதல் ரூ.1500 வரை விற்கப்பட்டுள்ளது. இன்னும் சில தியேட்டர்களில் நேரடியாகவே ரூ.500, 800 என்று விற்றுள்ளார்கள். இதுதொடர்பாக சில இடங்களில் புகார்களும், மோதல்களும் நடந்துள்ளன.
அதேசமயம், அஜித் மீதுள்ள வெறி காரணமாகவும், முதல்நாள், முதல்ஷோவில் படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலிலும் பலரும் விலையை பற்றி கவலை கொள்ளாமல் டிக்கெட் வாங்கி சென்றுள்ளனர்.
அரசு நிர்ணயித்த விலையில் தான் டிக்கெட் விற்கப்பட வேண்டும், ஆனால் அதையும் மீறி நடக்கும் இதுபோன்ற நிகழ்வுகளை அரசு உடனடியாக கவனிக்குமா, அதிக டிக்கெட் வாங்கும் தியேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்குமா என்பது சாமானிய ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.