ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் |
நடிகையும், தயாரிப்பாளருமான லட்சுமி மஞ்சு, தெலுங்கில் அடுத்து தயாரிக்க இருக்கும் புதிய படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு. இவர் தெலுங்கில் தயாரிப்பாளராகவும், சில படங்களில் நடித்தும் உள்ளார். இவர் இப்போது மணிரத்னம் இயக்க இருக்கும் பூக்கடை படத்தின் ஹீரோயினாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தெலுங்கில் குண்டலூர் கோடாரி என்ற பெயரில் ஒரு படம் உருவாக இருக்கிறது. இப்படத்தில் ஆதி பினிஷெட்டி, டாப்சி, சந்தீப் கிஷன் ஆகியோருடன் லட்சுமி மஞ்சுவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதோடு இந்த படத்தை தயாரிக்கவும் செய்கிறார். புதுமுகம் குமார் நாகேந்திரா இயக்குகிறார்.
1986-ல் ஏற்பட்ட வெள்ளத்தை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு அழகிய காதலை இப்படத்தில் சேர்ந்துள்ளார் புதுமுக டைரக்டர். விரைவில் துவங்க இருக்கும் இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க உள்ளார்.
இதுகுறித்து லட்சுமி மஞ்சு கூறுகையில், இளையராஜா அவர்கள் என்னுடைய படத்திற்கு இசையமைப்பதை எண்ணும்போது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. படத்திற்கான இசை கம்போசிங் சென்னையில் நடக்கிறது. இன்னும் ஒருவாரத்தில் படத்தின் சூட்டிங் ஆரம்பமாகிறது என்று கூறியுள்ளார்.