சிவகார்த்திகேயன் 24வது படம் தள்ளிப்போகிறதா? | தனுஷ் 54வது படத்தில் இணைந்தது குறித்து பிரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சி! | சிவராஜ் குமாரின் 131வது படம் அறிவிப்பு | 'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் | 68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் | ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் |
சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா. தென்னிந்திய சினிமா தாண்டி ஹிந்தியிலும் அசத்தி வருகிறார். இவர் கர்நாடக மாநிலம், கூர்க் பகுதியில் வாழும் கொடவா சமூகத்தை சேர்ந்தவர். சமீபத்திய ஒரு பேட்டியில், ‛‛இந்த சமூகத்தில் இருந்து வந்த முதல் நடிகை நான்தான்'' என்று கூறியிருந்தார் ராஷ்மிகா. இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.
கொடவா சமூகத்தில் இருந்து இதற்கு முன்பு பல நடிகைகள் திரைத்துறைக்கு வந்துள்ளனர். குறிப்பாக 90களின் இறுதியில் தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகை பிரேமா அந்த சமூகத்தை சேர்ந்தவர் தான் என்பதை குறிப்பிட்டு ராஷ்மிகாவுக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து பேசியுள்ள பிரேமா, "நான்கூட கொடவா சமூகத்தின் முதல் நடிகை அல்ல. நான் நடிக்க வருவதற்கு முன்பே இந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் சினிமாவில் இருந்திருக்கிறார்கள். குறிப்பாக நடிகை சசிகலா எனக்கு முன்பே சினிமாவிற்குள் வந்துவிட்டார். அதன் பிறகுதான் நான் சினிமாவிற்கு வந்தேன். தற்போதும் நிறைய கொடவா சமூகத்தினர் சினிமாவின் பல பிரிவுகளில் இருக்கிறார்கள். நடிகர், நடிகைகளாகவும் இருக்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.