ஸ்பெயின் கால்பந்தாட்ட மைதானத்தில் வெளியிடப்பட்ட டொவினோ தாமஸ், நஸ்ரியா பட டைட்டில் | 'வாழ' இயக்குனரின் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் 'ஹேப்பி லூப்' | ‛கிருஷ்ணாவதாரம்' படத்திற்கு உ.பி.,யில் வரிவிலக்கு அளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத் | காஞ்சனா 4 படத்தின் அதிரடி போஸ்டர் வெளியானது | மீண்டும் தெலுங்கு படத்தில் யோகி பாபு | ராமாயணா படத்தில் சாய் பல்லவியின் சம்பளம் எவ்வளவு? | மே 18ல் ராம்சரணின் 'பெத்தி' டிரைலர் வெளியீடு | ஏமாற்றம் தந்த ஏப்ரல் மாதம் | 'எல்ஐகே' 200 கோடி வசூலிக்கும் என எதிர்பார்த்தேன் : விக்னேஷ் சிவன் ஆதங்கம் | மீண்டும் வருகிறது 'மணி ஹெய்ஸ்ட்' |

சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா. தென்னிந்திய சினிமா தாண்டி ஹிந்தியிலும் அசத்தி வருகிறார். இவர் கர்நாடக மாநிலம், கூர்க் பகுதியில் வாழும் கொடவா சமூகத்தை சேர்ந்தவர். சமீபத்திய ஒரு பேட்டியில், ‛‛இந்த சமூகத்தில் இருந்து வந்த முதல் நடிகை நான்தான்'' என்று கூறியிருந்தார் ராஷ்மிகா. இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.
கொடவா சமூகத்தில் இருந்து இதற்கு முன்பு பல நடிகைகள் திரைத்துறைக்கு வந்துள்ளனர். குறிப்பாக 90களின் இறுதியில் தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகை பிரேமா அந்த சமூகத்தை சேர்ந்தவர் தான் என்பதை குறிப்பிட்டு ராஷ்மிகாவுக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து பேசியுள்ள பிரேமா, "நான்கூட கொடவா சமூகத்தின் முதல் நடிகை அல்ல. நான் நடிக்க வருவதற்கு முன்பே இந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் சினிமாவில் இருந்திருக்கிறார்கள். குறிப்பாக நடிகை சசிகலா எனக்கு முன்பே சினிமாவிற்குள் வந்துவிட்டார். அதன் பிறகுதான் நான் சினிமாவிற்கு வந்தேன். தற்போதும் நிறைய கொடவா சமூகத்தினர் சினிமாவின் பல பிரிவுகளில் இருக்கிறார்கள். நடிகர், நடிகைகளாகவும் இருக்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.




