பவழ மல்லி Vs முட்டை கலக்கி - 'யூத்'களுக்குள் கடும் போட்டி | தோழிகளுடன் பால் விளையாடி கையை முறித்துக் கொண்ட யாஷிகா | பேஷஸ் ஆப் கர- தனுஷின் கர படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியீடு | வட அமெரிக்காவில் கல்கி 2898 ஏடி படத்தின் வசூல் சாதனையை முறியடித்த துரந்தர் 2 | அண்ணன் வாரிசுகளின் பட பூஜைக்கு வந்து வாழ்த்திய பவன் கல்யாண் | முன்னணி இயக்குனர்களின் வாட்ஸ் ஆப் குழு ‛ரெய்னா' : அர்த்தம் தெரியுமா? | இது எனக்கு புது உலகம் : முதல்முறையாக வெப்சீரிஸில் நடிக்கும் சம்யுக்தா | சிவகார்த்திகேயனின் தங்கையாக நடிக்கும் மாளவிகா மனோஜ் | சினிமாக்காரர்களுக்கு ஞாயிறு கட்டாயம் விடுமுறை வேண்டும் : நிவின்பாலி வலியுறுத்தல் | சிபிஐ 6ம் பாகம் வருகிறது : இயக்குனர் மது தகவல் |

சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா. தென்னிந்திய சினிமா தாண்டி ஹிந்தியிலும் அசத்தி வருகிறார். இவர் கர்நாடக மாநிலம், கூர்க் பகுதியில் வாழும் கொடவா சமூகத்தை சேர்ந்தவர். சமீபத்திய ஒரு பேட்டியில், ‛‛இந்த சமூகத்தில் இருந்து வந்த முதல் நடிகை நான்தான்'' என்று கூறியிருந்தார் ராஷ்மிகா. இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.
கொடவா சமூகத்தில் இருந்து இதற்கு முன்பு பல நடிகைகள் திரைத்துறைக்கு வந்துள்ளனர். குறிப்பாக 90களின் இறுதியில் தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகை பிரேமா அந்த சமூகத்தை சேர்ந்தவர் தான் என்பதை குறிப்பிட்டு ராஷ்மிகாவுக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து பேசியுள்ள பிரேமா, "நான்கூட கொடவா சமூகத்தின் முதல் நடிகை அல்ல. நான் நடிக்க வருவதற்கு முன்பே இந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் சினிமாவில் இருந்திருக்கிறார்கள். குறிப்பாக நடிகை சசிகலா எனக்கு முன்பே சினிமாவிற்குள் வந்துவிட்டார். அதன் பிறகுதான் நான் சினிமாவிற்கு வந்தேன். தற்போதும் நிறைய கொடவா சமூகத்தினர் சினிமாவின் பல பிரிவுகளில் இருக்கிறார்கள். நடிகர், நடிகைகளாகவும் இருக்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.