புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |
"திருப்பதியில் போய் மொட்டை போட்டுவிட்டு, புருவத்தையும் சேர்த்து எடுத்தமாதிரி இருக்கிறது இன்றைய இசையின் நிலைமை என இளையராஜா வேதனை தெரிவித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளர் இளையாராஜா. சினிமாவில் 40 ஆண்டுகளாக இருக்கும் இவர், ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை படைத்திருக்கிறார். இளையராஜா தனது இசைக்குழுவுடன் தனது ரெக்கார்ட்டிங் ஸ்டுடியோவில் சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் மத்தியில் இளையராஜா பேசியதாவது...
"நான் இசையமைத்த நாற்பது வருட காலம் எல்லாம் முடிந்துவிட்டது. இனிமேல் முழு இசைக்கலைஞர்களும் உட்கார்ந்து பாடகர்களுடன் பாடி, இசையமைத்து, ஒலிப்பதிவு செய்வது என்பது இந்த உலகில் நடக்க போவதில்லை, அந்த காலக்கட்டம் எல்லாம் முடிந்து போய்விட்டது. இன்றைக்கு இசையமைப்பாளர்கள் இல்லை, இசை அமைப்பவர்கள் இல்லை, இசை வாசிப்பாளர்கள் இல்லை, பாடுபவர்கள் இல்லை என்று அர்த்தம். சும்மா ஏதோ பண்ணிட்டு இருக்கோம்.
சினிமாவில் வந்து கைய கால ஆட்டுகிற மாதிரி, சண்டை போடுவர்கள் எல்லாம் சண்டையா போடுகிறார்கள்... அது மாதிரி தான் இங்க பாடுறவனும் பாடப்போடுவதில்லை. ஏனென்றால் நல்ல டியூன் இல்லை. இந்த இசை எவ்வளவு உயர்ந்தது, எத்தனை ராகங்கள், எத்தனை கலப்புகள், எவ்வளவு வாத்தியக்கருவிகள், வாசிக்கிற விதங்களில் எத்தனை எத்தனையான பாவங்கள், எத்தனை உணர்வுகள், எத்தனை உணர்வுப்பூர்வங்கள்... எல்லாம் போயிடுச்சு.
திருப்பதியில் போய் மொட்டை போட்டுவிட்டு, புருவத்தையும் சேர்த்து எடுத்தமாதிரி இருக்கிறது இன்றைய இசையின் நிலை உள்ளது. இப்போது இசையுலகத்தில் இசையமைப்பாளர்களே கிடையாது என்று ஆகிவிட்டது. இந்தியா முழுக்க இதே நிலை தான், இசை உலகம் சிதைந்துவிட்டது.
இவ்வாறு இளையராஜா கூறியுள்ளார்.