புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |
பாகுபலி படத்தை இந்திய அளவில் பிரமாண்ட படமாக இயக்கிய ராஜ மவுலி, தற்போது பாகுபலி-2 படத்தையும் பிரமாண்டமாக உருவாக்கியிருக்கிறார். ஏப்ரல் 28-ந்தேதி வெளியாகும் இந்த படத்தின் ஆடியோ விழா சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் அதிக நேரம் பேசாத ராஜமவுலி படக்குழுவினருக்கு தனது நன்றியை டுவிட்டரில் தெரிவித்துள்ளார். ஆனால் தமன்னாவின் பெயரை மட்டும் அவர் குறிப்பிடவில்லையாம்.
இதனால் படப்பிடிப்பு நடந்தபோது தமன்னா ஏதேனும் கால்சீட் சொதப்பல் செய்து விட்டாரா? இல்லை வேறு வகையில் அவருக்கும் ராஜ மவுலிக்குமிடையே ஏதாவது பிரச்சினையா? என்கிற ரீதியில் தெலுங்கு மீடியாக்கள் பரபரப்பு செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். மேலும், பிர பாஸ், அனுஷ்கா, ராணா ஆகியோரின் நடிப்பு குறித்து பேசிய ராஜ மவுலி, தமன்னாவை கண்டுகொள்ளாமல் விட்டதினால், ஒருவேளை அவருக்கு பாகுபலி-2வில் முக்கியத்துவம் வாய்ந்த வேடம் இல்லையோ அதனால்தான் அவரை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டாரோ என்றும் செய்தி வெளியிட்டு வருகிறார்கள்.