20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
லிங்குசாமி இயக்கத்தில், யுவன்ஷங்கர்ராஜா இசையமைப்பில், கார்த்தி, தமன்னா மற்றும் பலர் நடித்து 2010ம் ஆண்டு, ஏப்ரல் 2ம் தேதி வெளியான படம் 'பையா'. யுவன், நா முத்துக்குமார் கூட்டணியின் அருமையான பாடல்கள், அழகான பயணத்துடன் கூடிய காதல் கதை என அப்போது ரசிகர்களைக் கவர்ந்த படம். யுவனின் இசையில் இந்தப் படத்தின் பாடல்கள் எவர்கிரீன் பாடல்களாகவே அமைந்தது.
படம் வெளியாகி 14 வருடங்கள் கழித்து இப்படத்தை ரிரிலீஸ் செய்ய உள்ளார்கள். இது குறித்து படக்குழுவினர் லிங்குசாமி, யுவன், கார்த்தி, தமன்னா ஆகியோர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்கள். “14 வருடங்களுக்குப் பிறகும் 'பையா' மீதான காதல் இன்னும் வலிமையாக இருப்பதைப் பார்க்க அதை மிகவும் சிறப்பாக உணர்கிறேன். இத்தனை காலத்திற்குப் பிறகும் பாசத்தையும், அன்பையும் இப்படம் பெற்றுக் கொண்டிருப்பதை நான் மிகவும் நன்றாகவே உணர்கிறேன். 'பையா' படத்தின் மேஜிக்கை நீங்கள் அனைவரும் மீண்டும் ஒரு முறை பெரிய திரையில் அனுபவிப்பதற்காக காத்திருக்க முடியவில்லை. லிங்குசாமி, கார்த்தி, யுவன் மற்றும் அனைத்து குழுவினருக்கும் அற்புதமான நினைவுகளுடன் முற்றிலுமான நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார் தமன்னா.
இயக்குனர் லிங்குசாமியை சந்தித்து 'பையா' படத்தின் பொன்னான தருணங்களை நினைவு கூர்ந்துள்ளார் கார்த்தி. நாளை 'பையா' படம் தமிழகம் முழுவதும் ரீ-ரிலீஸ் ஆகிறது.