விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் |
லிங்குசாமி இயக்கத்தில், யுவன்ஷங்கர்ராஜா இசையமைப்பில், கார்த்தி, தமன்னா மற்றும் பலர் நடித்து 2010ம் ஆண்டு, ஏப்ரல் 2ம் தேதி வெளியான படம் 'பையா'. யுவன், நா முத்துக்குமார் கூட்டணியின் அருமையான பாடல்கள், அழகான பயணத்துடன் கூடிய காதல் கதை என அப்போது ரசிகர்களைக் கவர்ந்த படம். யுவனின் இசையில் இந்தப் படத்தின் பாடல்கள் எவர்கிரீன் பாடல்களாகவே அமைந்தது.
படம் வெளியாகி 14 வருடங்கள் கழித்து இப்படத்தை ரிரிலீஸ் செய்ய உள்ளார்கள். இது குறித்து படக்குழுவினர் லிங்குசாமி, யுவன், கார்த்தி, தமன்னா ஆகியோர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்கள். “14 வருடங்களுக்குப் பிறகும் 'பையா' மீதான காதல் இன்னும் வலிமையாக இருப்பதைப் பார்க்க அதை மிகவும் சிறப்பாக உணர்கிறேன். இத்தனை காலத்திற்குப் பிறகும் பாசத்தையும், அன்பையும் இப்படம் பெற்றுக் கொண்டிருப்பதை நான் மிகவும் நன்றாகவே உணர்கிறேன். 'பையா' படத்தின் மேஜிக்கை நீங்கள் அனைவரும் மீண்டும் ஒரு முறை பெரிய திரையில் அனுபவிப்பதற்காக காத்திருக்க முடியவில்லை. லிங்குசாமி, கார்த்தி, யுவன் மற்றும் அனைத்து குழுவினருக்கும் அற்புதமான நினைவுகளுடன் முற்றிலுமான நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார் தமன்னா.
இயக்குனர் லிங்குசாமியை சந்தித்து 'பையா' படத்தின் பொன்னான தருணங்களை நினைவு கூர்ந்துள்ளார் கார்த்தி. நாளை 'பையா' படம் தமிழகம் முழுவதும் ரீ-ரிலீஸ் ஆகிறது.