இந்நாள் முதல்வரையும், முன்னாள் முதல்வரையும் அடுத்தடுத்து சந்தித்த நாசர் | சம்பளம் பற்றி வெளிப்படையாகச் சொன்ன சனம் ஷெட்டி | கருப்பு : முதல் நாள் வசூல் எவ்வளவு ? | துரந்தர் 2 : ஓடிடி வெளியீடு இரண்டு வாரம் தள்ளி வைப்பு | பிளாஷ்பேக் : ஒரு பாடலுக்காக 84 ஆயிரம் ஓவியங்கள் | பிளாஷ்பேக்: மூணாறில் படமான முதல் படம் | உண்மை எப்போதும் வெல்லும் : ஆர்த்தி பதிவு; குஷ்பு ஆதரவு | விஜய் அண்ணாவுக்கு நிறைய சவால்கள் இருக்கிறது : சவுந்தர்யா ரஜினி | என் மனைவியை காப்பாற்றுங்க : முதல்வர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை வேண்டுகோள் | விவாகரத்து வரை சினிமாவிற்கு முழுக்கு, என் குடும்பத்தை கெடுத்தவர் மூன்றெழுத்து நடிகை : ரவி மோகன் கண்ணீர் பேட்டி |

சுந்தர்.சி இயக்கிய அரண்மனை படத்தின் மூன்று பாகங்கள் ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது நான்காவது பாகம் மே மூன்றாம் தேதி திரைக்கு வரப்போகிறது. சுந்தர்.சி நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் தமன்னா, ராஷி கண்ணா ஆகிய இருவரும் நாயகிகளாக நடித்திருக்கிறார்கள். இந்த படத்தில் தமன்னாவும், ராஷி கண்ணாவும் ஒரு பாடலில் போட்டி போட்டு கவர்ச்சி நடனம் ஆடி உள்ளார்கள்.
அரண்மனை 4 படத்தில் நடித்த சில அனுபவங்களை புகைப்படம் மற்றும் வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார் தமன்னா. அதில், ஒரு சண்டை காட்சிகள் ரோப் கட்டி அந்தரத்தில் தொங்கும் வீடியோ இடம்பெற்றுள்ளது.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‛‛அரண்மனை 4 படம் ரசிகர்களை பெரிய அளவில் பயமுறுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த படம் திரைக்கு வந்த பிறகு சில இனிமையான அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன். இதில் நடித்தது சவாலாக இருந்தாலும் மகிழ்ச்சியாக இருந்தது. சண்டைக் காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்திருக்கிறேன்'' என்கிறார் தமன்னா.