திருமணத்திற்குப் பிறகு படப்பிடிப்பில் ராஷ்மிகா மந்தனா | கிங் படத்தை அடுத்து ரொமான்டிக் காதல் கதையில் நடிக்கும் ஷாருக்கான் | தேர்தல் முடிவுக்கு பிறகு துவங்கும் கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு! | மூன்று வேடங்களில் லெஜண்ட் சரவணன்! | தங்க கோவிலுக்கு சென்ற ஹன்சிகா | விஜய்யை தொடர்ந்து சூர்யாவை இயக்கும் வினோத் | அரசன் படத்தில் பிரியங்கா மோகன்? | கருப்பு படத்தின் டிஜிட்டல் வியாபாரம் நிறைவு | இரண்டு இண்டக்ஷன் ஸ்டவ்கள் ஆர்டர் செய்துள்ளோம் : அக்ஷய் குமார் | மூன்றாவது முறையாக சுந்தர் சி, வி.இசட் துரை கூட்டணி |

சுந்தர்.சி இயக்கிய அரண்மனை படத்தின் மூன்று பாகங்கள் ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது நான்காவது பாகம் மே மூன்றாம் தேதி திரைக்கு வரப்போகிறது. சுந்தர்.சி நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் தமன்னா, ராஷி கண்ணா ஆகிய இருவரும் நாயகிகளாக நடித்திருக்கிறார்கள். இந்த படத்தில் தமன்னாவும், ராஷி கண்ணாவும் ஒரு பாடலில் போட்டி போட்டு கவர்ச்சி நடனம் ஆடி உள்ளார்கள்.
அரண்மனை 4 படத்தில் நடித்த சில அனுபவங்களை புகைப்படம் மற்றும் வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார் தமன்னா. அதில், ஒரு சண்டை காட்சிகள் ரோப் கட்டி அந்தரத்தில் தொங்கும் வீடியோ இடம்பெற்றுள்ளது.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‛‛அரண்மனை 4 படம் ரசிகர்களை பெரிய அளவில் பயமுறுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த படம் திரைக்கு வந்த பிறகு சில இனிமையான அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன். இதில் நடித்தது சவாலாக இருந்தாலும் மகிழ்ச்சியாக இருந்தது. சண்டைக் காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்திருக்கிறேன்'' என்கிறார் தமன்னா.




