மலையாள இயக்குனர் டைரக்ஷனில் நடிக்கும் விக்ரம் | தேர்தல் நெருங்கும் வேளையில் முதல்வரை நேர்காணல் செய்த மோகன்லால் | ரசிகர்களை குஷிப்படுத்திய பேட்ரியாட் செகண்ட் லுக் போஸ்டர் | மோகன்லாலின் முதல் படத்தில் இணைந்து நடித்த நடிகர் காலமானார் | அறிமுகப்படுத்திய குருநாதரை திருமணத்திற்கு அழைக்காமல் தவிர்த்த ராஷ்மிகா மந்தனா | யஷ், பிரபாஸ் பாணியில் களமிறங்கும் சர்வானந்த் | சிபிசிஐடி அதிகாரியாக நடிக்கும் கவுதம் | மக்களின் கருத்தை அறிய அமெரிக்காவில் 'ராமாயணம்' திரையீடு | தமிழுக்கு வரும் ரியா ஷிபு | பிளாஷ்பேக்: சீரியஸ் கதையை சிரிப்பு கதையாக மாற்றிய விசு |

சுந்தர்.சி இயக்கிய அரண்மனை படத்தின் மூன்று பாகங்கள் ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது நான்காவது பாகம் மே மூன்றாம் தேதி திரைக்கு வரப்போகிறது. சுந்தர்.சி நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் தமன்னா, ராஷி கண்ணா ஆகிய இருவரும் நாயகிகளாக நடித்திருக்கிறார்கள். இந்த படத்தில் தமன்னாவும், ராஷி கண்ணாவும் ஒரு பாடலில் போட்டி போட்டு கவர்ச்சி நடனம் ஆடி உள்ளார்கள்.
அரண்மனை 4 படத்தில் நடித்த சில அனுபவங்களை புகைப்படம் மற்றும் வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார் தமன்னா. அதில், ஒரு சண்டை காட்சிகள் ரோப் கட்டி அந்தரத்தில் தொங்கும் வீடியோ இடம்பெற்றுள்ளது.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‛‛அரண்மனை 4 படம் ரசிகர்களை பெரிய அளவில் பயமுறுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த படம் திரைக்கு வந்த பிறகு சில இனிமையான அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன். இதில் நடித்தது சவாலாக இருந்தாலும் மகிழ்ச்சியாக இருந்தது. சண்டைக் காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்திருக்கிறேன்'' என்கிறார் தமன்னா.




