நடிகை ராதிகாவுக்கு டெங்கு : மருத்துவமனையில் அனுமதி | மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு |
பாரதிராஜாவின் இயக்கத்தில் 1985ம் ஆண்டு வெளிவந்த படம் ஒரு கைதியின் டைரி. இதன் கதை, திரைக்கதையை எழுதியவர் கே.பாக்யராஜ். கமல், ராதா, ரேவதி, ஜனகராஜ், மலேசியா வாசுதேவன் உள்பட பலர் நடித்திருந்தார்கள்.
இந்தப் படம் ஆக்ரி ரஸ்தா என்ற பெயரில் இந்தியில் ரீமேக் ஆனது. இந்தி ரீமேக்கை இயக்கியது கே.பாக்யராஜ். ஆக்ரி ரஸ்தாவில் கமல் நடித்த கேரக்டரில் அமிதாப்பச்சன் நடித்தார். அவருடன் ராதா நடித்த கேரக்டரில் ஜெயப்பிரதாவும், ரேவதி நடித்த கேரக்டரில் ஸ்ரீதேவியும் நடித்தனர்.
தமிழில் தயாரான போது பாக்யராஜ் எழுதிய கிளைமாக்சை மாற்றி கமல் சிலைபோல் அமர்ந்து இருந்து வில்லனை கொல்வது போன்று அமைத்தார் பாராதிராஜா. இது பாக்யராஜுக்கு பிடிக்கவில்லை என்றாலும் குருநாதர் விருப்பம் என்று எதுவும் பேசாமல் இருந்து விட்டார். படம் இந்தியில் தயாரானபோது கிளைமாக்ஸ் தன் விருப்பப்படி மாற்றி எடுத்தார்.
ஒரு காட்சியில் அமிதாப்பச்சன் தன் மனைவியிடம் ஆங்கிலத்தில் பேச வேண்டும். ஆனால், அமிதாப் எனது ரசிகர்களுக்கு ஆங்கிலம் தெரியாது நான் பேச மாட்டேன் என்றார். ஆனால் நீங்கள் ஆங்கில புலமை மிக்கவர் என்பது கதையின் படி உங்கள் மனைவிக்கும் தெரிய வேண்டும். உங்கள் ரசிகர்களுக்கும் தெரிய வேண்டும் கட்டாயம் பேசித்தான் ஆக வேண்டும் என்றார் பாக்யராஜ். அரை மனதுடன் பேசினார் அமிதாப்பச்சன். அந்த காட்சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
தமிழில் பெற்ற வெற்றியை விட பல மடங்கு இந்தியில் வெற்றி பெற்றது. பின்னாளில் இது குறித்து கூறிய பாக்யராஜ் "கிளைமாக்சை மாற்றியதும், ஆக்ஷன் படத்தை செண்டிமெண்ட் படமாக மாற்றியதுமே ஆக்ரி ரஸ்தாவின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணம்" என்றார்.