தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

மதுரை மாவட்டம், மேலுாரைச் சேர்ந்தவர், கதிரேசன். இவரது மனைவி, மீனாட்சி. இவர்கள், நடிகர் தனுஷ் எங்கள் மகன். அவர், எங்களுக்கு பராமரிப்பு தொகை வழங்க உத்தரவிட வேண்டும் என, மேலுார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தனுஷ், நான் தான் அவர்களின் மகன் என்பதற்கு, ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை. மேலுார் நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்களிக்க வேண்டும். அந்நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என, உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில், தனுஷுக்கு, நேற்று முன்தினம் உயர் நீதிமன்ற கிளையில், அங்க அடையாள சோதனை நடந்தது. இந்நிலையில், கதிரேசன் தம்பதி, உண்மையான பெற்றோரை கண்டுபிடிக்க, எங்களுக்கும், தனுஷுக்கும் மரபணு சோதனை நடத்த உத்தரவிட வேண்டும் என, மனு தாக்கல் செய்துள்ளனர். இம்மனு, இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. கூடவே தனுஷூக்கு எடுக்கப்பட்ட அங்க அடையாள சோதனைகள் குறித்த அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. தனுஷ் தொடர்பான வழக்கை மேலூர் நீதிமன்றம் விசாரிக்க மதுரை உயர் நீதிமன்ற கிளை தடை விதித்துள்ளது. மேலும் உயர் நீதிமன்ற கிளையில் உள்ள வழக்கில் உத்தரவு வரும் வரை இந்த தடை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தனுஷின் வழக்கை ஒட்டுமொத்தமாக மார்ச் 9-ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.