பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
நடிகர் அஜித், தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் தனது 57-வது படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் பல்கேரியாவில் நடந்து வருகிறது. இந்நிலையில் முதல்வராக இருந்த ஜெயலலிதா, நேற்று முன்தினம் இரவு காலமானார். அவருக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், கட்சியினர் என பலரும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் நேற்று சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர்., சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. பல்கேரியாவில் படப்பிடிப்பில் இருந்ததால் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்த அஜித்தால் வர முடியவில்லை, இரங்கல் கடிதம் மட்டும் ஒன்றை வெளியிட்டிருந்தார்.
ஜெ.,க்கு அஞ்சலி : இந்நிலையில், பல்கேரியாவில் இருந்து அவசரமாக கிளம்பிய அஜித், இன்று அதிகாலை சென்னை விமானம் நிலையம் வந்தார். நேராக அவர் வீட்டுக்கு செல்லாமல், ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு தனது மனைவி ஷாலியுடன் சென்று அஞ்சலி செலுத்தினார்.
சோ-க்கு அஞ்சலி : தொடர்ந்து மூத்த பத்திரிகையாளரும், நடிகருமான சோ ராமசாமியின் மறைவு செய்தியை கேட்டதும் அவருக்கும் சென்று அஞ்சலி செலுத்தினார்.