சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
இந்தியாவிலுள்ள பல்வேறு மொழிகளிலும் வெளியாகி வரும் திரைப் படங்களுக்கு யு, யுஏ, ஏ ஆகிய சான்றிதழ்கள்தான் இப்போதுவரை வழங்கப் பட்டு வருகிறது. ஆனால் இனிமேல் இந்த சான்றிதழ்கள் தவிர, யு12+, யு 15+, ஏ+ ஆகிய பிரிவுகளிலும் படங்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளதாம். இந்த புதிய சான்றிதழ் பிரிவுகள் காரணமாக வன்முறை, செக்ஸ் சம்பந்தப்பட்ட காட்சிகளை இனிமேல் கத்தரிக்க மாட்டார்களாம். அதற்கு தகுதியான சான்றிதழ்களை கொடுத்து விடுவார்களாம்.
இது மட்டுமின்றி, திரைப்படங்களுக்கு அவசரகதியில் அதாவது ரயில் டிக்கெட் தட்கலில் எடுப்பது போன்று உடனடியாக சான்றிதழ் பெறவேண்டும் என்றால் கூடுதல் தொகை கொடுத்து சென்சார் செய்து கொள்ளும் முடியும் விரைவில் நடைமுறைக்கு வர உள்ளதாம். திரையுலகினரில் நீண்டகால கோரிக்கை காரண மாக இந்த புதிய சான்றிதழ் பிரிவுகளை இந்திய தணிக்கைக்குழு நடை முறைக்குகொண்டு வருகிறதாம்.