காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்ஜே சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ‛மார்க் ஆண்டனி'. இந்த படத்தின் ஹிந்தி பதிப்பை வெளியிட மும்பையில் உள்ள சென்சார் அதிகாரிகள் ரூ.6.5 லட்சம், லஞ்சம் பெற்றனர் என விஷால் புகார் கூறினார்.
இதுபற்றி பிரதமர் மோடி மற்றும் மகாராஷ்டிரா முதல்வரின் கவனத்திற்கும் கொண்டு சென்றார் விஷால். இதையடுத்து உடனடியாக நடவடிக்கை எடுத்த மத்திய தகவல் ஒலிப்பரப்புதுறை அமைச்சகம், விஷாலின் புகார் குறித்து விசாரிக்க அதிகாரிகளை மும்பை அனுப்பி வைத்தது. உடன் நடவடிக்கை எடுத்ததற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தார் விஷால்.
இந்நிலையில் சென்சார் போர்டு மீது விஷால் கூறிய லஞ்ச புகார் தொடர்பாக சிபிஐ., வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளது. இதுதொடர்பாக மெர்லின் மேனகா, தீஜா ராம்தாஸ், ராஜன் ஆகிய மூன்று அதிகாரிகளிடம் விசாரணை நடைபெறுகிறது.




