ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
‛பிரேம்' படம் மூலம் அறிமுகமாகி இப்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சாய் பல்லவி. குறிப்பாக தெலுங்கு சினிமாவில் இவருக்கு அதிக வாய்ப்புகள் வருகின்றன. இருப்பினும் தனக்கான படத்தை தேர்ந்தெடுத்து மட்டுமே நடித்து வருகிறார். அடுத்து பாலிவுட்டிலும் கால்பதிக்க உள்ளார். அமீர்கான் படத்தில் இவர் நடிப்பதாக தகவல் வந்தது.
இந்நிலையில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனின் தந்தையும், தயாரிப்பாளருமான அல்லு அரவிந்த் ராமாயணத்தை படமாக ஹிந்தியில் தயாரிக்கப்போவதாக அறிவித்திருந்தார். இதை நிதேஷ் திவாரி இயக்குகிறார். இதில் ராமராக ரன்பீர் கபூர் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. இப்போது சீதையாக சாய் பல்லவி நடிக்க போகிறாராம். அதேப்போன்று ராவணன் வேடத்தில் கேஜிஎப் புகழ் யஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை மூன்று பாகங்களாக எடுக்க திட்டமிட்டுள்ளனர். அடுத்தாண்டு படப்பிடிப்பு துவங்கி, முதல்பாகம் அடுத்தாண்டு இறுதியில் வெளியாகும் என கூறப்படுகிறது.