பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
சென்னையில் கன்னட திரைப்பட விழா நேற்று தொடங்கியது வருகிற 31ந் தேதி வரை 4 நாட்கள் இந்த விழா நடக்கிறது. இதில் கன்னடத்தில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற, பரவலாக பாராட்டப்பட்ட 12 படங்கள் திரையிடப்படுகிறது.
ரஷியன் கலாச்சார மையத்தில் நேற்ற துவக்க விழா நடந்தது. இதில் கலந்து கொண்ட நடிகை சரோஜாதேவி பேசும்போது: கன்னட மக்களும், தமிழ மக்களும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். கன்னடத்தில் இருந்து வந்த என்னை உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றவர்கள் தமிழக ரசிகர்கள். இப்போதும் பலர் கன்னடத்தில் இருந்து தமிழில் நடிக்க வருகிறார்கள். அவர்களுக்கு தமிழக மக்கள் ஆதரவளித்து வருகிறார்கள். அதேபோல கன்னட படங்களுக்கும் ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நான் பலரிடம் பேசிப் பார்த்ததில் அவர்கள் கன்னட படம் பார்க்க தயராக இருக்கிறார்கள். எனவே இங்குள்ள சினிமா சங்கங்கள் கன்னட படங்களை இங்கு திரையிட ஆவன செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். என்றார்.